mandag 31. mars 2014

மாற்றங்கள் (சிறுகதை) செதுக்கியவர் ஆசிர்தாசன் ஸ்கார்பரோ கனடா

                                         
மாற்றங்கள் (சிறுகதை) 
செதுக்கியவர் ஆசிர்தாசன் ஸ்கார்பரோ கனடா 
                                                        
          அவசர.. அவசரமாக உடைமாற்றிக்கொண்டு வெளியில் வந்த நிறஞ்சனா, அம்மா நான் போய்ட்டு வாறன் என்று குரல்கொடுத்தாள். மகளின் குரல்கேட்டு வெளியில் வந்த பார்வதி, பிள்ள எங்கயம்மா இந்த நேரம் போறாய் எனக் கேட்க,  'அம்மா நான் எத்தனை தடவை சொல்லியிருக்கின்றன் வெளியில போகேக்க இப்படி கேட்க வேண்டாமென்று' சொல்லி தாயியை கடிந்தவள், நான் சீக்கரம் வந்திடுவன் என சொன்னாள். அதற்கு பார்வதி புள்ள இந்த இரவு நேரத்தில உனக்கு என்ன  அப்படி அவசர அலுவல் ஏதெண்டாலும் நாளைக்கு காலையிலை போவன் என்றவவை, காதில் விழுத்தாமல் கதவைத்திறந்து போனாள் நிறஞ்சனா. வாசலிலேயே மகள் போகும் திசையை பார்த்துக்கொண்டு நின்ற பார்வதிக்கு மகள் மறைந்துவிட்டாள் என்ற நினைவு வர சிறிது வினாடிகள் சென்றது.

2009 ஆண்டு, அந்த அழிவின் வடுக்கள் இன்னமும் தமிழர் நெஞ்சங்களிலிருந்து மாறாதநிலை. எப்படி மறக்கமுடியும் எத்தனை இழப்புக்கள், எத்தனை பிரிவு கள், அங்கு ஒலித்த குழந்தைகளின் அழுகுரல் இன்றும் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. தந்தையை இழந்த குடும்பங்கள், தாயை பிரிந்த குழந்தை கள், ஏன் தாய், தந்தையை இழந்து நிற்கதியா நிற்கும் எம் வருங்காலத்தின் செல்வங்கள் அனாதையாக்கப்பட்ட கொடுமைகள். உலக நாடுகள் அனைத்து மே பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று சொல்லி அப்பாவி மக்களை கொண்று குவித்து மகிழ்ந்த அந்த கொடுமைகள் பார்வதியின் நெஞ்சங்களில் அழியாமல் பசுமரத்தாணி போல இன்றும் இருக்கின்றது.  நிறஞ்சனாவை காப்பாற்றுவதற்காக பார்வதியும், அவள் கணவனும்  பட்ட துன்பங்கள், இறுதி யாக தன் பூவையும், பொட்டையும் பறிகொடுத்து விட்டு, அந்த வெறிபிடித்த அரக்கர்களிடமிருந்து இவளை காப்பாற்றி இந்த நாட்டுக்கு வந்திறங்கிய வேளை பார்வதி அடைந்த மகிழ்ச்சி, இவ்வளவு விரைவாக மறையும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்ட பார்வதி, 'என்ன இது மோட்சமென்று எண்ணி வந்த நாட்டில் இத்தனை மோசமான வாழ்க்கை யா'? என வெறுப்போடு இருந்தவவின் காதுகளில் தொலை பேசி மணியடிக் கும் சத்தம் கேட்டு, இது ஒரு பக்கம் இந்த நேரம் என கடிந்து கொண்டு ஹலோ சொன்னா, மறு முனையில் ஒரு ஆண் குரல் நிறஞ்சானா நிக்கிறாங்களா எனக் கேட்டது. பார்வது நீங்கள் யார் பேசுகிறது என்று கேட்டதும் மறுமுனை தொலைபேசி துண்டிக்கப்பட்டது. தனக்குள் தானே திட்டி தீர்த்தாள் பார்வதி. இந்த நாடுகளுக்கு வந்தும் திருந்தாத ஜென்மங்கள் என்று கோபமாக திட்டி னாள். சீ என்ன நாடு இது.... என்று திட்டியவவின் மனதில்.......

எப்படி இந்த நாட்டை நான் குறை கூற முடியும் என்ற கேள்வி எழுந்ததும், தன் னைத்தானே சுதாகரித்துக்கொண்டு இங்கு வாழுகின்ற 3 இலட்சம் தமிழர்க ளில் எத்தனை பிள்ளைகள் படிப்பில்  வேலையில், கெட்டிக்காரராகவும், இன்னும் எத்தனையோ சமூக விடையங்களில் முன்னேற்றமாகவும் எமது நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இளைஞர்களாகவும் வாழ்கிறார்களே, 'நான் அறிந்த மட்டத்தில் இப்படிப்பட்ட குழப்படி பிள்ளை களை விட நல்லவர்கள் தான் அதிகம்'; என்று எண்ணி தன் மகள் இப்படி ஆகி விட்டாளே என மனம் வருந்தினார். உன் நண்பனை தெரிந்தால் உன்னைத் தெரியும் என்பதுபோல் இங்கு கூடுகின்ற கூட்டத்தை பார்த்தால் தெரியும் தானே.

வாழ்வில் மாற்றங்கள் என்பவைதான் நிஜமானவை, ஒவ்வொரு நாளும் நிகழ் கின்ற இயற்கையின் மாற்றங்கள், விஞ்ஞானத்தின் மாற்றங்கள், இப்படியாக எல்லாத்துறை மாற்றங்களால் தான் இந்த உலகம் அடுத்த கட்ட பரிமாணத்தி ற்கு முன்னேறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் சில மனிதர்கள் மட்டும் தம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான மாற்றங்களை மட்டும் தேர்வு செய்யமால் தங்கள் வாழ்வை அழிக்கும் தீய மாற்றங்களை தற்காலிக சுக த்தை, மகிழ்ச்சியை தங்கள் வாழ்வின் அவசியமாக கருதி, தேர்வு செய்து தங்களையே தாங்கள் அழித்துக்கொள்கிறார்களே இது எப்படி மாற்றமாகும். அதுவும் குறிப்பாக பிந்தங்கிய நாடுகளில் இருந்து வந்த இளைஞர்களுக்கு இங்கு கிடைக்கின்ற சுதந்திரம் அவர்களின் வாழ்வை எப்படியெல்லாம் சீரழி;கின்றது என்ற எண்ணங்களோடு இருந்த பார்வதியின் கதவு தட்டும் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்த பார்வதி சென்று கதவை திறந்த போது இரண்டு இளைஞர்கள் தன் மகள் நிறஞ்சனாவை கைத் தூக்கலாக வைத்திரு ந்த காட்சி கண்டு ஒரு கணம் தன்னை மறந்தவவாக இது என்ன? என் பிள்ளை க்கு என்ன நடந்தது? என கத்தினார். தாயின் சத்தம் கேட்டு குடிபோதையில் இருந்த நிறஞ்சனா அம்மா கத்தாத என உளறினாள். திறந்த கதவுக்குள்ளால் அந்த இரண்டு இளைஞர்களும் அவளைக் கைத் தூக்காக கொண்டு சென்று அவளின் பெட்டில் வளர்த்தி விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்;. வெளிக்கதவை தாழிட்டு வந்த பார்வதி தலை தலையென அடித்து அழுது தன்னையும் வருத்தினார்.

என்ன வாழ்க்கை, இவளுக்காக தன் கணவனையும் பறிகொடுத்து இவளைக் காப்பாற்றி உலகிலேயே சிறந்த நாடாக பேசப்படும் இந்த நாட்டுக்கு தன் சொத்து பத்தெல்லாம் விற்று இங்கு வந்தால், எவ்வளவு நல்வாழ்க்கை இருக்க தீய கூட்டத்தோடு சேர்ந்து இவள் கெட்டுபோனதை எண்ணி எண்ணி வேதனைப்பட்ட பார்வதி இதை விட இவளை அந்த சண்டையிலேயே சாக விட்டிருக்கலாம் என எண்ணி வேதனைப்பட்டார். இந்த உலகம் பல காரணிகளின் மாற்றங்களால் வளர்ச்சியின் பரிமாணத்திற்கு  நோக்கிப் போக்கொண்டிருக்கினற வேளை இந்தப்பிள்ளைகள் இப்படி கெட்டு சீரழிந்து போகிறார்களே என்ற பெருமூச்சோடு படுக்க சென்றார். துயரங்களால் சூழப்பட்டிருந்த பார்வதியின் இதயம் இன்றைய நிறஞ்சனாவின் வருகை கண்டு மேலும் மிகச்சோர்வடைந்ததை அவரால் உணர முடிந்தது. படுப்பதற்கு முன் இறைவா என் குழந்தையை காப்பாற்று என்று வேண்டிக் கொண்டார்.

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் தான் மாற்றங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பவர்கள். அவர்களில் கூட இந்த உலக மாற்றத்தின் நல்ல விடையங்களை விடவும் அதிகமாக கெட்ட மாற்றங்களையே சிலர் விரும்புவர்களாகவும், எம்மி;ல் சிலர் தங்களின் பிள்ளைகள் இந்த நாட்டு;க்கு வந்ததால் தான் கெட்டு விட்டதாகவும் எண்ணுகின்றார்கள். இப்படியாக கெட்டுப்போறவர்கள் எங்கிருந்தலும் கெட்டுப்போவார்கள் என்பதனை, நாம் உணர மறுக்கின்றோம். இப்படியானவர்களில் தங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற பெரும் தாக்கத்தினுடேயே மாற்றம் பெறுவர்கள். இவர்களுக்கு பெற்றோர், உறவினர்களி;ன் அறிவுரைகள் எப்போதும் வேண்டாததாகவே இருக்கும். இந்த வளர்;ச்சி கண்ட நாடுகளில் தனி மனித சுதந்திரம் நிறைவாக கிடைப்பதானல் தான் இவர்கள் இப்படியாக மாறுகின்றனர் என்ற வாதம் தவறானது என்பது மட்டும் உண்மை.

விடியலின் ஒளித்தெறிக்கைகள் யன்னல் வழியே தன்னை திணித்துக் கொண்டு சோர்வோடு படுத்திருந்த நிறஞ்சனாவின் கண்களைத் துளைத்தது. கண்ணில் பட்ட சூடு தாங்காமல் அசதியாக இன்னமும் போதை முறியாதவளாக சிணிங்கிக்கொண்டு கண் திறக்க முயற்சித்தவளை ஒளித்தெறிக்கைகள் விடாமல் தடுத்தது. சற்று அசைந்து ஒளித்தெறிக்கையை விலகி கண்ணைத்திறந்தவவுக்கு அட நன்றாக விடிந்து விட்டதே என எண்ணிக்கொண்டு எழும்ப முயற்சித்தவேளை அவளால் தன் தலையை தூக்க முடியாமல் பாரமாக இருந்தது. தனக்கு இரவு என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ள முடியாதவளாக மீண்டும் படுத்தாள். பூமி சுற்றுகின்றது என்பதனை மீண்டும் நிருபிக்கும் விதமாக ஒளித்தெறிக்கையிலிருந்து விலகி சென்ற நிறஞ்சனாவை மீண்டும் வெயில் சுட்டது. முன்பை விட அதிகமாக சுட்டதனால் பாய்ந்து எழும்பினால். இப்போது போதையும் சற்று குறைந்து இருந்ததை உணர்ந்தாள். இருந்தம் எனக்கு என்ன நடந்தது, ஏன் நான் இப்படி ஆனேன் என்ற குற்ற உணர்வு நிறஞ்சனா மனதில் கேள்வஜ தொடுத்ததை உணர்ந்தவளாய்....

அம்மா... அம்மா என கூப்பிட்டுக்கொண்டு ஹால், மற்றும் குசினி என தேடி னாள். ஒரு இடமும் அம்மாவைக் காணாதது சற்று பயத்தினை கொடுத்ததது. என்ன இது என்று தன்னைத்தானே கேள்வி கேட்டவள் தாயின் அறையை நோக்கி போனாள், அப்போது கூட அம்மா இவ்வளவு நேரம் தூங்கமாட்டா ங்களே என எண்ணிக்கொண்டு கதவைத் திறந்தவளுக்கு, அவள் கண்ணில் பட்டது அம்மாவம், ஆப்பாவும் சிரித்த முகத்தோடு இருந்த படம் தான். அதை பார்க்கும் போது நிறஞ்சனாவின் குற்ற உணர்வு மேலும் அதிகரித்தது. தன்னை ப்பார்த்து கேவலாமாக சிரிப்பது போல் உணர்ந்தாள்.  அந்த அறையில் காணப்ப ட்ட  அமைதி, அம்மா எங்கே என்று தேடும் வேகத்தையும் அதிகரித்தது. தன் னை சுதாகரி;தக் கொண்டு தாய் படுத்திருக்கும் கட்டிலின் மேல் தன் பார்வை யை திருப்பியவளுக்கு, பார்வது தூங்கிக்கொண்டிருந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.  என்ன இது இவ்வளவு நேரமாகியும் அம்மா எழும்பவில்லையே என பயந்தவளாக கிட்டே போய் கூப்பிட்டதற்கு எந்தவித பதிலும் இல்லாமை மேலும் பயத்ததை அதிகரிக்க செய்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொட்டு எழுப்பிய நிறஞ்சனாவின் பயம் உண்மையாகிப் போனது. ஐயோ என் அம்மா என்னை விட்டு போய்டாங்களே என கதறினாள். நிறஞ்சனாவின் கதறல் சத்தம் கேட்டு யாரும் அங்கு வரவில்லை. தன் தனிமையை உணர்ந்த வள், இது தான் நம்மட ஊர் இல்லையே கத்திய சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வாறதற்கு. நிறஞ்சனா தனிமையிலேயே கதறினாள். அந்த கதறல் யாரை யும் வரவழைக்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் உறவினர்க ளுக்கு தொலைபேசியில் தாயின் இழப்பை பற்றி சொல்லி அழுதாள். அவர்கள் வந்து தான் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்தனர். தாயின் இழப் பின் கொடுமையை நிறஞ்சனாவின் தனிமை உணர்த்தியது. யார் அம்மாவின் இறப்பிற்கு காரணம் என யோசித்தாள்.  தனத இந்த கெட்ட பலக்கங்களால் என் அம்மைவை கொன்று விட்டேனே என எண்ணி எண்ணி வேதனைப்பட்டவள்,...


தன்னைப்போன்ற பெண்களின் மாற்றங்கள் எத்தனை அம்மாக்களை செத்து க்கொண்டிருக்கிறார்கள். என்று எண்ணிப்பார்த்தாள். நாங்கள் மூத்த குடிமக்கள் என்று உலகம் முழுவதும் சொல்லிக் கொண்டு வாழ்பவர்களுக்கு, வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு வந்ததும் நமது கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் மறந்து விடுகிறோமே ஏன் என தன்னைத்தானே கேளவி கேட்டாள். தனது தவறான நட்பு தான் காரணம் என்பதனை உணர்ந்தாள். இந்த நாடு எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் தந்துள்ளது. அந்த சுதந்திரத்தினை நாங்கள் தவறாக பாவி த்து கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றதனால் தானே எங்கள் அம்மாக்கள் இறக்கிறார்கள் என்று எண்ணிய நிறஞ்சனாவின் மனதில் தனக் காக தன் அம்மா பட்ட கஸ்ரங்களை எண்ணி, அந்த அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணினாள். அதற்காக தனது அத்தனை கெட்ட பழக்கங்களையும, கெட்ட நண்பர்களையும்; விடவேண்டுமென்று சபதம் எடுத்து, தாயின் படத்திற்கு முன் மௌனமாக நின்றாள். அப்போது நிறஞ்சனாவின் உள் உணர்வில், தாயின் குரல்... நிறஞ்சனா எனக் கூப்பிட்டது. என் மகளே உன்னில் என் மரணம் மாற்றத்தை தந்ததென்றால் அதற்காக நான் இந்த மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றேன். இந்த சத்தம் கேட்டு கண் திறந்த நிறஞ்சனாவிற்கு அங்கு யாருமே இல்லாததும், அம்மா தன்னோடு தான் இருக்கிறார் என்ற உணர்வுகளோடு புது பெண்ணாக மாற்றம் கண்டாள், இப்படி எத்தனை நிறஞ்சானக்கள் வாழ்கிறார்கள்? நிறஞ்சனாக்கள் மட்டுமல்ல எத்தனை ஆண்கள் உங்கள் வாழ்கையை இழந்திருக்கிறீர்கள் என்பதனை உணர்ந்து தாயின் இழப்பில் நிறஞ்சனா மட்டுமே மாறியவளாக இருக்கட்டும். இனிவரும் மாற்றங்கள் எந்த இழப்பையும் பரிசளிக்காது இருக்க நாங்கள் மாற்றம் காண்போம்... மாற்றங்கள் நம் வாழ்வை, நம் சமூகத்ததை உயர்த்துவதாக அமையட்டும்


என் அன்பு வாசகர்களே! இந்த சிறுகதையின் பெயர்கள் மட்டும் பொய்யானவை. இந்த கதை என் நண்பரின் உறவினர் குடும்பத்தில் நடந்த நிஜ சம்பவமாகும். வாழ்வில் மாற்றங்கள் ஒன்றுதான் என்றும் மாறாதவை. அந்த மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்படுகின்ற நல்ல மாற்றங்களாக இருக்க வேண்டும் என்ற நட்பாசையின் ஆதங்கத்தினாலும். நமது சமூகம் புலம் பெயர்ந்த நாடுகளில் சிறப்பாக வாழவேண்டும் என்பதனை இன்றைய இளைஞர், யுவதிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த உண்மை சம்பவத்தை ஒரு சிறு கதையாக தந்துள்ளேன

ஆசீர் அன்ரனி
ஸ்காபரோ


onsdag 26. mars 2014

வெற்றுக்காகிதங்கள் -டானியல் அன்ரனி-

வெற்றுக்காகிதங்கள்

-டானியல் அன்ரனி-


உள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த 'அாிக்கன் லாம்பின் ' மெல்லிய வெளிச்சம் மாத்திரம் மங்கலாக வெளி விறாந்தைக்கு நிழல் விழுத்தியது.முற்றத்தில் நிற்கும் முருங்கை மரத்துடன் சின்னவன் கட்டிப்போட்ட 'கறுவல் ' ஆள் அரவம் கேட்டதும் விறுக்கென்று எழுந்து கால்கள் இரண்டையும் அகட்டி உடம்பைச் சிலிர்த்து சோம்பல் முறித்துக்கொண்டே ஆக்ரோசத்துடன் குரல் எழுப்பியபடி அங்கும் இங்குமாக ஓடியது.அவன் மெதுவாக அதன் வழுவழுப்பான முதுகுப் புறத்தைத் தடவிக் கொடுத்து விறாந்தைக்கு வந்தான்.பொிய அறையில் அம்மா, மூத்த தங்கைகள், சின்னஞ்சிறுசுகள் சிலவும் படுத்துக் கொள்ளுவார்கள். தந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தால்தான் நித்திரை கொள்வேன் என்று அடம்பிடிக்கும் சின்னவன், வழமைக்கு மாறாக இன்று உள் அறையில். அவனுடைய விசும்பல் விட்டுவிட்டு உள்ளே கேட்டது. படுத்த பாயிலேயே சலம் பெய்துவிட்டதற்காக அம்மா சற்று நேரத்திற்கு முன் அவனை அடித்திருக்க வேண்டும்.சாருக்குள் விாித்துக்கிடந்த ஓலைத் தடுக்கில் அவனுடைய தந்தை தான் படுத்துக் கிடந்தார். குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டாலும் அவர் அயர்ந்து தூங்குகிறார் என்று சொல்லிவிட முடியாது. சின்ன அரவம் கேட்டாலும் 'பேய் பிசாசைக் ' கண்டவர் போல திடுமென விழித்தெழுந்து விடும் சுபாவம் அவருக்கு.தகப்பனை நினைத்தால் இவனுக்கு இப்பொழுதும் பயம்தான். இவனுக்கு அம்மாவை எப்படியாவது அரட்டிச் சாப்பாடு கேட்கவேண்டும். அம்மாவை அரட்டும் சத்தத்திலே தகப்பனும் எழுந்து விட்டால் பிறகு என்ன, ஒரே புறு புறுப்புத்தான்.'சும்மா இருந்து தின்னுறதும் பத்தாமல் எங்கேயோ ஊர் சுத்திப்போட்டு ஏமஞ் சாமத்தில வந்து இஞ்ச விடியப்புறம் தொழிலுக்குப் போறதுகளட நித்திரையையும் குழப்புறான் '.தந்தையின் பேச்சுக்களை கேட்கும் போது கோபம் கோபமாக வரும். அவமானத்தால் உடம்பெல்லாம் கூசும். வீட்டைவிட்டு எங்கே யாவது ஓடிப்போகவேண்டும்போல ரோசம் வரும். பிறகு ஆறுதலாக இருந்து தனிமையில் சிந்தித்துப் பார்க்கும்போது அவர் சொல்லுவதிலும் கூட நியாயம் இருப்பதுபோல் தென்படும்.

இருபத்தைந்தைக் கடந்தும் படிப்பையும் தொடரமுடியாமல் வேலையைத் தேடிக் கொள்கிற சாமார்த்தியமும் இல்லாத குடும்பத் திற்கு மூத்தபிள்ளையைப் பற்றி முழுக் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள தந்தை இப்படி அலுத்துக்கொள் வதில் தவறில்லை என்று தனக்குள்ளேயே மனதைத் தேற்றிக்கொள்வான்.மற்றவர்களின் உழைப்பில் நின்று கொண்டிருக்க இவனுக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. அதற்காக அவன்தான் என்ன செய்வான்!அவனிடமும் தான் 'பைல் ' நிறைந்த 'சேட்டுவிக்கற் 'றுகள், வேலை யாராவது கொடுக்க வேண்டுமே! யாரையாவது பிடித்து 'சாிக்கட்டி ' காாியம் பார்க்கலாம் என்றால் கையில் மூவாயிரம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.கையில் மூவாயிரம் இருந்தால் மூத்த தங்கையின் கல்யாணம் இரண்டு வருசத்துக்கு மேல் இழுபட்டுக்கொண்டு கிடக்குமா ?வயிறு பிசைந்தது. பசியினால் விண்.... விண்.... என்று இரைந்தது. பொிய அறைக்கதவு அண்டை சென்றான். மூத்தவள் ராணியை எழுப்பலாம் என்று முதலில் நினைத்தான். அவளை இலகுவில் எழுப்பிவிட முடியாது. அவள் எழும்புவதற்கு முதல் தகப்பனே எழுந்து வந்து விடுவார். அம்மாவை எழுப்புவதுதான் இலகுவான காாியம்.'அம்மா....அம்மா....அம்மா 'மெதுவாக வாசலில் நின்றபடி கூப்பிட்டான். உள் அறையில் சில நிமிடங்கள் வரை எந்தவித சலனமும் இல்லை. கதவை லேசாகத் தட்டிக்கொண்டே மறுபடியும் குரல் கொடுத்தான். உள்ளே யாரோ அரண்டு எழும் சலனம். அதைத்தொடர்ந்து அம்மாவின் அடைத்த குரல்.'புள்ள....புள்ள....தங்கச்சி, அண்ணன் வந்து நிக்கிறான் போல இருக்கு. எழும்பிப் போய் சோத்தைப் போட்டுக் கொடு '.'போண எனக்கு அலுப்பாயிருக்கு.... சும்மா எல்லாத்துக்கும் என்னத்தான் இந்த மனுசி முறிக்குது. அங்க அவள் மெள்ள பிரண்டு கிடக்கிறாள். அவளை அரட்டிச் சொல்லன் ' இது ராணியின் குரல்.'எழும்படி. அவள் இப்பதான் வீடி இல வெட்டிப்போட்டு அலுப்பில கிடக்கிறாள். அங்க அந்த இளந்தாாி எவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டு நிக்கிறான்.

எழும்படி. சுனங்கல் '.தங்கை ராணி அலுப்புடன் அம்மாவைத் திட்டிக்கொண்டே லாம்புடன் வெளியே வந்தாள். அவள் கண்களில் நித்திரையின் அழுத்தம். நாள் முழுவதும் வீட்டு வேலைகள் செய்து அலுத்துப்போன சோர்வு முகத்தில்.இவன் தந்தையின் படுக்கையைத் திரும்பிப்பார்க்கிறான். அவர் மறுபக்கம் புரண்டு படுத்துக்கொள்கிறார்.'பாவம் மனுசன். இனி நடுச்சாமத்தில் எழும்பிப்போய் நித்திரை முழிச்சு தூண்டலுக்கு கிடந்துபோட்டு விடிய பஞ்சி அலுப்பில வாறவர். 'அவன் எழுந்துபோய் கைகளை நீாில் நனைத்துக்கொண்டு குசினிக்குள் சென்று மரப் பலகையில் குந்திக்கொண்டான்.ராணி சோற்றைக் கோப்பையில் போட்டுக்கொடுத்துவிட்டு கிணற்றடிப் பக்கம் இருந்த குடத்தில் தண்ணீர் வார்த்து வரச்சென்று விட்டாள்.முதல்படியை பிசைந்து வாயில் திணித்துக்கொள்ளப்போனபோதுதான் முதல் நாள் இரவு இவனும் நண்பன் யோசப்பும் போய் பார்த்து வந்த 'வல்மத்துவ ' சிங்கள சினிமாப் படத்தின் காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக மனதில் நெருங்கியடித்துக்கொண்டு வந்தன.வேலையற்ற பட்டதாாி நண்பர்கள், அவர்கள் கிராமத்தில் படும் க~;டங்கள். முகம் கொடுக்கும் பிரச்சினைகள்.நிலச்சுவாந்தாரன் ஒருவனின் கபடத் தனமான கொடுமையினால் சொந்த நிலத்தைப் பறிகொடுக்கும் அந்த ஏழை வாலிபனின் குடும்பம், தட்டிக்கேட்கச்சென்ற வாலிபன் இறுதியில் துப்பாக்கிவேட்டுக்குப்பலியாகி மடியும் அந்தக் கொடூரமான இரத்தத்தை உறைய வைக்கும் காட்சி....இறுதியில் எாியும் அவனுடைய சிதைக்கு முன்னால் அழுது புலம்பும் வயோதிபத்தாயின் ஆறாத்துயர்! 'சை, என்ன கொடுமை '.அவன் இதயத்தில் அவனை அறியாமலே ஒர் அந்தாிப்பு கண்களில் நீர்க் கசிவு. கூடவே எழுந்த பழி உணர்வு. இத்தனை கொடுமைகள் மலிந்த சமூகமா ?'அண்ண, அம்மானும் மாமியும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்ட வந்திற்றுப் போயினம் '. வெகு நேரமாய்த் தலை குனிந்தபடி கோப்பையிலிருந்த சோற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.ராணி தன் எதிரே பலகையில் இருந்த இவனையே வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவள் கேட்பது கூட இவன் காதுகளில் சாியாக விழவில்லை.'என்ன ராணி கேட்டனி ? ''அம்மானும் மாமியும் வீட்ட வந்திற்றுப் போயினம். இந்த ஆவணிக்குள்ள கல்யா ணத்தைச் செய்து போடட்டாம்.'அப்புவும் அம்மாவும் அதுக்கு என்ன சொன்னவியள் '.இவன் அப்படிக்கேட்டதும் ராணி தலையைக் குனிந்துகொண்டாள். அவள் கை விறகுச்சுள்ளி ஒன்றை எடுத்து நிலத்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தது.மூத்தவனுக்கு வேலை கிடைச்சதுக்குப் பிறகுதான் கலியாணத்தைப் பற்றி யோசிக் கலாம் எண்டு சொல்லிப்போட்டினம்.'அதுக்கு அம்மான் ஆக்கள் என்ன சொல்லிச்சினம் ? ''உனக்கு வேலைகிடைச்சு எனக்குச் சீதனக்காசு சம்பாதிக்கிறதுக்கிடையில் தங்கட மகன் மூண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாப் போயிடுவாராம். வசதியில்லாட்டி வேறு இடத்தைப் பார்க்கச்சொல்லிப் போட்டுப் போயிற்றினம். ' அவள் குரல் அதற்கு மேல் பேச முடியாமல் தழுதழுத்தது.இவன் நெஞ்சுக்குழியில் ஏதோ சிக்கிக் கொண்டது. மூச்சு முட்டிக்கொண்டு வருவது போன்ற தவிப்பு. பக்கத்திலிருந்த செம்பிலிருந்து நீரை மடமடவெனக் குடித்துவிட்டு விறுக்கென்று எழுந்து விட்டான்.அதற்கு மேல் ஒரு பிடி சோறும் தொண்டைக்குள் மறுத்துவிட்டது. செம்பையும் தண்ணீரையும், எடுத்துக்கொண்டு கழுவு வதற்காக வெளியே வந்தான். 

சில கணங்கள் மெளனத்தால் கரைந்தன.'தங்கச்சி சாப்பிட்டிற்றியா.... ''ஓம் .... ''பொய் சொல்லாத.... ''ஓம் அண்ணா, சோறு தண்ணியுக்குள்ள போட்டு பினாட்டோட குடிச்சனாங்க. ''அம்மா சாப்பிட்டாவா. ''ஓம்.... ''இவன் தம்பி எங்க ? படுக்கையில் காணோம். நாளைக்கு சோதனையில்ல தொடங்குது. ''ஓம் அண்ண, அவன் பள்ளிக்கூடத்தால பின்னேரம் வந்தான். நாளைக்கு ஆரோ மந்திாி மார் கொழும்பில் இருந்து புதுசாக்கட்டின கட்டிடத்தைத் திறக்க வருவினாமாம் எண்டு சொல்லிக்கொண்டு நின்றவன், பிறகு ஆரோ பெடியளோட சைக்கிளில கூடிக்கொண்டு போறான். மத்தியானமும் சாப்பிட வரயில்ல. 'தம்பியின் போக்கும் இவனுக்குப் பிடிபட வில்லை. எதற்கு எடுத்தாலும் நியாயம் பேசு வான். ஏதேதோ கூட்டங்களுக்கெல்லாம் போய் வருவதாக ஊாில் உள்ள பலர் இவனிடம் கூறியிருக்கின்றனர். படிப்பிலும் முன்பு போல் அக்கறையில்லை. வீட்டிலும் அதிகம் தங்கு வதில்லை.இவன் மனதில் பெரும் குழப்பம். நம்பிக்கைகள் தீர்ந்துபோன ஆற்றாமையினால் மனதை அழுத்திக்கொண்டிருந்த துயரங்கள் தூக்கத்தைத் துரத்தி அடித்தன.அறையைத் திறந்துகொண்டு உள்ளே போய்விட்டான்.அன்று பெளர்ணமி கழிந்து மூன்றாம் நாள். நிலவு அப்பொழுதுதான் காலித்துக் கொண்டு வந்தது. இதமாக வீசிக்கொண்டிருந்த சீதளக் காற்றின் சிலுசிலுப்பில் கிணற்றடிப் பக்கம் நிற்கும் நெல்லி மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.எங்கேயோ வீட்டிலிருந்து யாரோ ஒருவன் உச்ச சுதியில் நாட்டுக்கூத்துப் பாட்டைப் பாடுகிறான். தகரப்பேணி மிருதங்கமாக முழங்குகிறது.இரண்டாவது சினிமாக் காட்சி பார்த்து விட்டு வீதியால் செல்வோாின் ஆரவாரங்கள், விமர்சனங்கள். அதிர் வெடிச் சிாிப்புக்கள். அவையும் அடங்கின.படுக்கையைத் தட்டிப் போட்டு அலுப்புடன் சாய்ந்துகொண்டு சில கணங்கள் தூங்குவதற்கான போராட்டம். படலை திறக்கும் சத்தம் கேட்டது. இவனுடைய தம்பிதான் வியர்த்து விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். அவனுடைய கைகளில் சுருட்டப்படட போஸ்டர்கள். தகரப் பேணி, பிறஸ்....காகிதச் சுருள்களை அவசரமாக மூலையில் எறிந்து விட்டு கிணற்றடிப்பக்கம் சென்று நீரைவார்த்து கைகளை அழுத்தி உழக்கி கழுவிக்கொண்டிருந்தான்.கைகளில் இரத்த நிறத்தில் சாயம் நீருடன் கழுவுண்டு நிலத்தில் மண்ணுடன் கலந்து செந்நிறமாகி....அவன் படுக்கையிலிருந்து விறுக்கென்று எழுந்துபோய் காகிதச் சுருள்களை எடுத்து விாித்து ஒவ்வொன்றாக விளக்கு வெளிச்சத்தில் படித்துப்படித்துப் பார்த்தான்.'முதலாளித்துவக்கல்வி முறை முற்றாக ஒழிய வேண்டும். ''வெற்றுக்காகிதங்கள் வேலை தருமா ? ''தரப்படுத்துதல், இன ஒடுக்குதல். 'அவன் மனம் அந்த வெள்ளைத் தாள்களில் சிவப்பு எழுத்தில் பளிச்செனத்தொிந்த வாக்கியங்களின் அர்த்தங்களை முதல் முறையாக பிாியத்துடன் நினைத்துப் பார்க்கின்றது.இவன் சுமந்த வெற்றுக்காகிதங்கள், வீணான நாட்கள், 'சின்னத்தனமான ' அரசியல்வாதிகளின் பின்னே விவஸ்தை கெட்டு அலைந்துதிாிந்த அந்த நாட்கள். கசப்பான மாத்திரையை விழுங்கிக்கொண்டவன் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

இந்த சமூகத்தை, வாழ்க்கையை, இந்தத் தேசத்தை அவனுக்கு முன்பே பூிந்துகொண்டுவிட்ட இவன் தம்பி இவனுக்கு இன்னும் புதிரானவனா....!தம்பி கிணற்றடியிலிருந்து கை கால்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து எழுந்தான். இவன்கை கால்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து எழுந்தான். இவன் காகிதக் கட்டுக்களுடன் நின்று அவனை உற்றுப் பார்ப்பதை அவதானித்து விட்டவனாய் கொல்லைப்புறமாக மெதுவாக நகா;ந்தான்.முற்றத்தில் தந்தையின் மரக்கோல், சவள் பலகை, பறி.... நீர் கோலும் பட்டை....தங்கூசிப் பெட்டி.'இந்த ஆவணிக்கு தங்கச்சியின் கல்யாணத்தை எப்படியாவது முடிச்சுப் போடவேணும் '.அவன் அந்த நினைப்பிலிருந்து விடுபடவில்லை. ஒரு கணப்பொறிதான். தெரு நாய்கள் பலத்த சத்தத்துடன் குரைத்தன. அடங்கிப் போயிருந்த வெளிப்புற ஓசைகள், சனங்களின் விழிப்பும், நடமாட்டமும், ஒடுங்கிய குரல்களும் இவனைத் திடுக்கிட வைத்தன....தெற்குத் தெருவால் உறுமிக் கொண்டு வந்த ஜீப் ஒன்று படலைக்கு முன்னே 'சடின் பிறேக் 'குடன் நின்றது. ஜீப்பிலிருந்து 'தாம்தீம் ' என்று பூட்ஸ் கால்கள் நிலத்தில் குதித்தன. படலை திடாரெனத் திறந்தது.இரண்டு காக்கிச் சட்டைகள் முன்னே பாய்ந்து இவனைப் போஸ்டர்களுடன் இறுகப் பற்றிப்பிடித்துக் கொண்டன. பிடாியில் ஒருத்தனின் அ;டி ஓங்கி இறங்கியது. இரும்புக்குண்டால் அடித்தது போல். இன்னொருவனின் சப்பாத்துக்கால் சினத்துடன் முகத்தில் பதிந்தது. தாடையிலும், மூக்கிலும் வெடிப்பு. இரத்தம் கசிந்தது, நிலத்தில் முத்தமிட்டு எழுந்த அவன் முகத்தில் இரத்தத்துடன் அந்த மண்ணும் அப்பிக்கொண்டது.தரதரவென இழுத்துக் கொண்டு போய் ஜீப்பில் இவனை எறிந்தார்கள். உள்ளே இருந்தவர்களின் பூட்ஸ் கால்களுக் கிடையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். 'போஸ்டர் ஒட்டுறது ? வடுவா றாஸ்கல்! செம்மையாகச் சாத்தினால் தான் திருந்துவீங்கள் '.தமிழ்க் குரல் உள்ளே இருந்து ஒலித்தது. இவன் மெல்ல எழுந்து 'அம்மா.... ' என முனகிக்கொண்டே இருக்கையில் அமர முயற்சித்தான். ஜீப் வண்டி வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் வீட்டோாின் அவலக்குரல்கள் கேட்டன. இப்போது நன்றாக உள்ளே இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. சில முகங்கள் வீதிகளில் கண்டவை, உதட்டிலும், தாடையிலும் வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கையால் அழுத்தித் துடைத்தான். இப்போது வீதியை நன்றாகப் பார்க்க முடிந்தது. நிலவு வெளிச்சத்தில் மதில் சுவர்களில் சிவப்பு மையினால் எழுதப்பட்ட சுலோகங்கள் பளிச்செனத் தொிந்தன. போஸ்டர்களும் தொிந்தன.இவன் தம்பியை நினைத்துக்கொண்டான். அந்த வேதனைக்குள்ளும் கூடவேசிாிப்பு வந்தது.(முற்றும்)

வலை -டானியல் அன்ரனி-

வலை 
-டானியல் அன்ரனி-

நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல்இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தைஏற்படுத்தியிருந்தது.
எப்பொழுதுமே அவ்வேளையில் ஊமை அமைதியுடன், கடலை அண்டிப் பரந்து கிடந்த வளவில் நீண்டுநெடுப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களிடையே தனித்து நிற்கும் பூவரச மரத்தடியில் நின்று கொண்டு,பலர் நடந்துபோன அந்தச் சம்பவத்தைப் பற்றி ஆவேசமாகவும், உரத்த தொனியிலும் தங்களுக்குள்விவாதித்துக் கொண்டு நின்றனர்.

வாடை அன்று பெயர்ந்தது. வேகமாக அள்ளுண்டு வந்த காற்றில் தென்னங்கீற்றுகள் வெறி பிடித்து ஆடின.கடல் கறுத்துக் குழம்பிக் கிடந்தது. வடுமாறி வெள்ளம் நுகைக்கத் தொடங்கியது.

கடல் முழுவதும் மிதந்து கொண்டிருந்த தோணிகளின் 'சள சள' ஓசையின் சலனங் களினால் 'களங் கண்டி'வலைகள் பாய்ந்திருந்த தடிகளில் குந்தியிருந்த வெண்கொக்குகள் நீலவானத்தில் எழுந்து பறந்து செல்வதும்நிலை கொள்ளாமல் மீண்டும் நீர்ப் பரப்பில் இறங்கி கூரிய அலகுகளினால் எதையோ கொத்திச் செல்லும்முனைப்பில் போராடிக் கொண்டிருந்தன.

கடலை அண்டிய காரைதீவு வீதியில் ஆனைக்கோட்டைக்கு அப்பாலிருந்து அங்கு வரும் இழுப்புவலைக்காரார் இழுத்து வந்த மீன்களையும், இறால் வலைகளையும் வீதியில் பரத்திப் போட்டுக்கடற்பாசிகளிலும், தாழை களிலும் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களும் அவ்விடத்தைவிட்டு விரை வில் சென்று விட வேண்டுமென்று பரபரத்தாலும், சுற்றி நின்று காதுசெவிபடக் கத்திக் கொண் டிருந்த காக்கைக்கூட்டங்கள் அவர்களை விடுவதாயில்லை.

வில்லூன்றிச் சுடலையைத் தாண்டி வடக்கால் காக்கைதீவுச் சந்தையை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததோணியின் அணியத்தில் நின்ற சைமன் தூரத்தில் வரும்போதே கடற்கரை வளவில் பெரும் கூட்டம்ஆரவாரப்பட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான்.அற்ப சம்பவங்களைக் கூட பெரிது படுத்திஉணர்ச்சி வசப்பட்டவர்களாய் உரத்து விவாதிப்பதும் விவாதம் முற்றி கைகலப்பாக மாறி தங்களுக்குள்ளேஅடிபட்டுக் கொள்வதும் அந்த ஊர் மக்களுக்கு பரிச்சயமாகிப் போன ஒன்று என்பது பிரசித்தம்.

சைமன் ஒரு தினுசானவன். ஊர்ச் சோலிகள் எதுவானாலும் கண்டுக்காமல் இருக்கமாட்டான். அதிலும்தொழிலாளிகள் விஷயம் என்றால் உரத்தே குரல் எழுப்புவான். இவனைப்பற்றி வேறு மாதிரியான கதை ஊரில்இருந்தாலும் ஊர் விஷயங்களில் இவன் கொள்ளுகின்ற அபிப்பிராயங்கள் பற்றி சனங் களுக்கு மதிப்புஇருந்தது.

'டேய் சவிரி, அங்க கவனியடா, வளவில் ஒரே சனக்கூட்டமா இருக்குது. ஊரில் ஏதாவது நடந்துபோச்சுதோ....'

தோணியின் நடுத்தளத்திலிருந்து மீன்களைத் தெரிந்து பறிக்குள் போட்டுக் கொண்டிருந்த சவிரியும், சைமன்சுட்டிக்காட்டிய பக்கம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

'ஓம் அண்ண, ஏதோ நடந்துதான் போச்சுது போல இருக்கு. நேற்று இவன் பொன்ராசாதான் தண்ணியைப்போட்டுவிட்டு மச்சினனோட கொழுவிக் கொண்டு நின்றான்.'

'நான் நினைக்கயில அப்படி யிருக்குமெண்டு. கூட்டத்தைப் பார்த்தால் விஷயம் வேறபோல கிடக்கு.கொஞ்சம் கரையைத் தள்ளிப் பார்த்துப் போட்டுப் போவம்.'

சைமன் தாங்கிக் கொண்டிருந்த மரக்கோலை தோணியின் இடப்புறம் போட்டு வேகத்தைக்கட்டுப்படுத்தினான்.

சவிரி காக்கைத்தீவுச் சந்தையைப் பார்த்தான். பொழுது நல்லா ஏறிவிட்டது. கூட்டம் கலைந்துகொண்டிருந்தது.

'அண்ண, சந்த கலையுது. நேரஞ் செண்டா அவளவை நாறல் மீனைக்கேக்கிற விலைக்கு கேப்பாளவயள்'.
சைமன் மீண்டும் மரக்கோலை வலப்புறம் போட்டுக் கரையை நோக்கித் திருப்பினான்.

'சவிரி வலை இழுக்கயுக்கேயே வெள்ளப்பா போயிற்று. இண்டைக்கு நம்மட சந்தையில விப்பம். மீனும்அவ்வளவு இல்லத்தானே....'

சவிரி மீண்டும் மீன்களைப் பொறுக்கு வதில் மௌனமாகி விட்டான். சைமன் கரையை நோக்கி வேகமாகத்தோணியைத் தாங்கினான். தோணி நீரைப் பிளந்து கொண்டு சீறிப்பாய்ந்து கரையை அடைந்தது.

'சவிரி, தோணியைக் கட்டிப்போட்டு மீன்களைச் சந்தைக்கு கொண்டுபோ. நான் என்னெண்டுகேட்டுப்போட்டு வாறன்'.

சைமன் தோணியிலிருந்து மெதுவாக இறங்கினான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கடல்உவர்ப்பில் காய்ந்து போயிருந்த 'சொறசொற'த்த முகத்தையும், மீன் செதில்கள் ஒட்டிக்கிடந்த உடலையும்துடைத்துவிட்டு, இடுப்பில் கட்டியிருந்த கச்சையை அவிழ்த்துப் போட்டுவிட்டு துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டான்.

வளவில் நின்று முகம் சிவந்துபோக உதடுகள் துடிக்க முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருந்தசெம்பட்டையான சுருட்டை மயிர்களை ஒரு கையால் ஒதுக்கியபடி மறு கையை அடிக்கடி உயர்த்தியபடிநியாயம் கதைத்துக் கொண்டிருந்தான் மரியதாசன். மண் மேட்டிலேறி வளவை நோக்கி வந்து கொண்டிருந்தசைமனும் இவனைக் கண்டு கொண்டான்.

கூடி நின்றவர்கள் எல்லோர் பார்வையும் வளவைத் தேடி வந்து கொண்டிருந்த சைமன் பக்கம் திரும்பியது.

'என்னடாப்பா, ஏன் இப்படி விடியக்கு முன்னமே கூட்டம் கூடி கத்திக் கொண்டு நிக்கறீங்க,'
சற்று எரிச்சலுடன் வெளிவந்த சைமனின் வார்த்தைகளைக் கேட்டதும் நடந்துபோன சம்பவத்தை இன்னும்அவன் அறியவில்லையென்பதைக் கூடி நின்றவர்கள் ஊகித்துக் கொண்டார்கள்.
'என்னண்ணை, உங்களுக்கு விஷயம் தெரியாதா? நம்மட சூசைக்கிழவனுக்கு அவன் யோணும் அவன்ரஆக்களும் அடிச்சு மண்டையை உடைச்சுப் போட்டாங்க. மனுசனுக்கு இழுக்குது.' சைமன் இதைக்கேட்டதும் சற்று நேரம் மௌனமாக நின்றான்.
'ஏன் கிழவனுக்கு அடிச்சவங்க....?'
'கிழவன் விடுவலைக்கு வாறன் எண்டுபோட்டு யோணட்ட ஆயிரம் ரூபா முற்காசு வேண்டினவராம்.சுகமில்லாமல் திருக்க முள்ளு அடிச்சுக் கிடந்ததினால் இனிமேல் தொழிலுக்கு வர ஏலாதெண்டு சொல்லிப்போட்டாராம் கிழவன். காசை உடன வைக்கச் சொல்லித்தான் இந்தச் சண்டித்தனம்'. மரியதாசன் உணர்ச்சிவசப்பட்டவனாக மீண்டும் உரத்துக் கத்தினான்.
'சம்மாட்டிமாரட்ட முற்காசு வாங்கிப் போட்டு தொழிலுக்கு வாறன் எண்டு சம்மதிச்சுப் போட்டா தொழிலுக்குபோகவேணும். இல்லாட்டியா அவங்கட காசு திருப்பிக் கொடுக்கவேணும். இதுதானே ஊர் வழக்கம். யோணும்பலமுறை காசக் கேட்டுப்பார்த்தார். குடுக்காமல் கிழவனும் வெறியில் அவங்களைப் பேசிப்போட்டார்'.
யோணின் விடுவலையில் மன்றாடியாக தொழில் நடத்திச் செல்லும் சற்று வயதான சந்தியோ மீண்டும்சம்மாட்டியின் பக்கம் பரிந்து பேசியதைக் கண்ட மரியதாசனும் அவனோடு கூட நின்ற யேசுராசனும்கொதித்தனர். அவர்களும் யோண் வலையில் தொழிலுக்குப் போகிறவர்களாக இருப்பினும் யோணும்அவனுடைய ஆட்களும் செய்தது அநீதி என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை.
'சந்தியோ அண்ணைக்கு சம்மாட்டி மாரட்ட நக்கிற புத்தி இன்னும் போகயில்ல.' மரியதாசன் திடீரெனவீசியெறிந்த சுடு சொல்லை எதிர்பாராத சந்தியோ அதிர்ந்து போனார்.
'தம்பி மரியாதையாகப் பேசும், இல்லாட்டி....'
'இல்லாட்டி.... என்ன செய்து போடு வீங்க.' மரியதாசன் முஷ;டியை உயர்த்திக் கொண்டு சந்தியோவைநோக்கி நெருங்கினான். இவ்வளவு நேரமும் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்றசைமன் நடந்துபோனவற்றை ஒருவாறு ஊகித்துக் கொண்டாலும் விவாதம் இப்போது வேறு திசையில்திரும்புவதைக் கண்டதும் நிலைமையைச் சமாளிக்க நினைத்தான்.
'இஞ்ச பாருங்க, நீங்ளேன் உங்களுக்குள்ள சண்டை பிடிக்கிறீங்க. பின்னேரம் சனங்களைக் கூப்பிடுவம்.சம்பந்தப் பட்டவர்களையும் கூப்பிடுவம். அதுக்குப் பிறகு பாப்பம். இப்ப எல்லோரும் பேசாமப் போங்க'.
கூடி நின்ற எல்லோரும் முணுமுணுத்த படி மெல்ல மெல்ல அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.
மரியதாசனும் யேசுராசனும் மாத்திரம் உரத்துப் பேசிச் செல்வது சைமனின் காதுகளுக்குக் கேட்டது. 'சம்மாட்டிமாற்றை கொழுப்பை இதோட அடக்க வேணும்.'
'சைமனின் இதயத்திலும் இனம் தெரியாத துடிப்பு. பல தலைமுறையாக ஏதோ ஓர் அடிமை முறையில் இவர்கள்நடத்தப்பட்டு வரும் முறைபற்றி இவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு உறுத்தல் இருந்து வந்தது.ஆயினும் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை உருப்பெறாமல் தள்ளிப்போய் கொண்டிருந்த காரணத்தினால்அவனுடைய எண்ணங்களை வெளிக் கொணர முடியாமல் இருந்தது. தொழிலாளர்களின் உணர்ச்சிகளைதற்காலிகமாகவேனும் செம்மைப்படுத்த இப்பொழுது அதற்குச் சரியான நேரம் வந்துவிட்டதாக அவன்உள்மனம் உணர்த்தியது. நீண்ட நேரமாக கலகலத்துக் கிடந்த அந்த வளவு இப்போது வெறிச்சோடிக்கிடந்தது. சைமன் சிந்தனை வசப் பட்டவனாக வளவைத் தாண்டி மண் ஒழுங்கையில் இறங்கி வீட்டைநோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
ஊர்க்கூட்டம் தொடங்க சரியாக நாலு மணிக்கு மேலாகிவிட்டது. ஊரில் உள்ள சம்மாட்டிமாரில் சிறில்ஏதோ வேலை காரணமாக கரையூர் சென்றதனால் அவரைத் தவிர எல்லோரும் கூடியிருந்தனர். கூட்டம் கூடிபத்து நிமிடங்கள் கழியத்தான் தனது சதை பருத்த தேகத்தையும் தூக்க முடியாமல் நசினல் சட்டைக் குள்ளேஇரட்டை வடம் பவுண் சங்கிலி சகிதம் சம்மாட்டித் தனத்தின் செருக்கும், திமிரும் முகத்தில் பிரதிபலிக்கஅரக்கி அரக்கி வந்து பின்வாங்கில் குந்திக் கொண்டார் யோண் சம்மாட்டி. தலைமை வகித்த பெரியார்சுருக்கமாக பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். கூட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மரியதாசன்எழுந்தான்.
'சம்மட்டியார் யோணும் அவங்கட ஆக்களும் செய்த செயல் மிகப்பிழை. கிழவனட்டை மன்னிப்புப் கேக்கவேணும்.'
'பிழையெண்டால் நியாயம் காட்ட வேணும்.'
சவிரிமுத்துச் சம்மாட்டி குறுக்கே குரல் கொடுத்தார். 'பணம் கொடுக்குமதியாக இருந்தால் மரியாதையாகக்கேட்டு வாங்க வேண்டியது தான். அதற்காகத் தொழிலாளிகளை அடிமை களாக நினைத்துக் கண்டபடிபேசுவதும் அடிப்பதும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.'
'தொழிலுக்கு வாறன் எண்டு கடன் பட்டால் தொழிலுக்கு வரவேண்டியதுதான் கடமை. இல்லாட்டி காசைத்திருப்பித் தர வேண்டியதுதான்.'
'அதுக்காக இருபது வருஷத்துக்கு மேலாக வெயிலெண்டும் குளிரெண்டும் பாராமல், உங்களுக்கு உழைத்துத்தந்த மனுசன் என்றும் பாராமல், கை நீட்டி அடிக்கிறதா? எங்கட உழைப்பிலை தானே நீங்க வீடும் வாசலுமாகஇருக்கிறீங்க. அதுக்கென்ன அந்த ஆயிரத்தையும் அவங்களுக்கே விட்டால்....'
யேசுராசன் எழுந்து நின்று குரல் கொடுத்தான்.
'நாங்க இவ்வளவு பணம் பொட்டு தொழில் நடத்துறம். அவங்களுக்கு பங்குக்காசு கொடுக்கிறம்.... இதைவிடஎன்னத்தை அவங்க உழைச்சுத் தந்திட்டாங்க. சாமத்திய வீடெண்டாலும்....செத்த வீடெண்டாலும்எங்கட்டத்தானே ஓடி வருவினம். ஐஞ்சோ பத்தோ கொடுத்து நாங்க தானே உதவி செய்யிறம்'.
யோணின் பேச்சு தலைமை வகித்துக் கொண்டிருந்த பெரியவருக்கும் கோபத்தையும், எரிச்சலையும்கொடுத்தது.
சைமன் எழுந்தான்.

'சம்மட்டியார் ஏதோ தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பதாகக் கூறினார். அவர் இறால் போட்டுசுறாப்பிடிக்கும் கெட்டித்தனம் எங்களுக்கு இப்ப விளங்காது என்ற எண்ணம் போல கிடக்கு. ஒரு வருசத்திலகமிசனுக்கு எண்டு ஒரு தொழிலாளியிட்ட ஆயிரம் ரூபாவுக்கு மேல் கழிக்கிறீங்க. ஆனால் அவங்களுக்குக்கொடுக்கிறது என்ன இருநூறு, முந்நூறு.,ஒரு சாராயப் போத்தல். உழைக்கிறதில தோணிக்கு, வலைக்குஎன்று எவ்வளவத்தை தள்ளி நீங்க எடுத்துக் கொள்ளுறீங்க. இதெல்லாம் எங்களுக்கு விளங்காததல்ல.'
எல்லோரும் சைமன் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் சம்மாட்டிமாரைத்ரகசியமாகக் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மரியதாசன் மீண்டும் எழுந்தான். 'நாங்க இனி மேல் இவங்கட தொழிலுக்கு போவதாக இருந்தால்எங்களுடைய பங்குப் பணத்தைக் கூட்டித்தரவேணும். 'கமிசன்' பணம் சரியாகக் கணக்குப் பாக்க வேணும்.சூசைக்கிழவனிடம் மன்னிப்புக் கேக்க வேணும். இல்லாவிட்டால் கடலில வலை இறங்காது.'
சம்மாட்டிமாரிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது. யோண் எழுந்தார். எல்லோரையும் நன்றாகப் பார்த்தார்.கனத்த குரலை ஒருமுறை செருமிவிட்டுக் கொண்டார். 'இஞ்ச நாங்க ஒண்டும் பயந்தாக்களல்ல. எங்களையாராலும் வெருட்டேலாது. உங்கட உழைப்பு வந்துதான் சாப்பிடப் பொறமா? எத்தனை நாளைக்கு சுருண்டுகிடக்கப் போறீங்க? பற நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்.' யோண் கூறிவிட்டுகூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும்வெளியேறினர்.
கூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டுஇருந்தவர் களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.
'சைமன் அண்ணே....சைமன் அண்ணே....'
விறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளைஅரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத்திக் கொண்டிருந்தசைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் தெரிந்தன. இருட்டில ஒன்றும் தெளிவாகத்தெரியாவிட்டாலும், அது மரியதாசின் கனத்த குரல் என்பதை ஊகித்துக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் படலையடியில் சுருண்டு படுத்துக் கிடந்த சைமனின் 'கறுவல்' பலமாகக் குரைத்தது.
'ஆர் மரியதாசா? ஏன் வாசலில் நிக்கிறீங்க. படலையைத் திறந்து கொண்டு உள்ள வாங்களன். நாய் ஒண்டும்செய்யாது'.
சைமன் லாம்பை எடுத்து முற்றத்தில் வெளிச்சம் விழக்கூடியதாக தூக்கிப் பிடித்தான்.
யேசுராசா, மரியதாசன், சவிரி, செபமாலை, சூசை முத்து, தெற்குத் தெரு பர்னாந்து நிரைத்து வந்துசைமனைச் சூழ ஆசுவாசத்துடன் குந்திக் கொண்டார்கள்.
சைமன் மீண்டும் மடவலைப் பகுதியை கால்களின் பெருவிரல்களுக்குள் மாட்டிப் பொறுக்கப் பிடித்துக்கொண்டு வேகமாகக் கிழிசல்களைக் பொத்திக் கொண்டே அடுக்களைக்குள் இருந்த மனைவிக்குக் குரல்கொடுத்தான்.
'இஞ்ச.... பிலோமினா, வந்திருக்கிறவங்களுக்கு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா. குறை நினைக்காதீங்கடாப்பா, கூப்பன் சீனி எப்பவோ முடிஞ்சு போச்சுது. சக்கரைதான்....'
'உங்கட வீட்டில மாத்திரமில்ல அண்ண, எல்லாற்ற வீட்டிலயும் இந்த நிலைதான். காசு கொடுத்து வெளியிலசீனி வாங்க ஆரட்ட காசு இருக்கு'.
மரியதாசன் இருண்டு கிடந்த முற்றத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான். மரியதாசன் முகத்தில்தெம்பு இல்லை. கூட வந்திருந்த எல்லோர் முகத்திலும் ஏதோ ஓர்வித சோர்வுக்களை அப்பிக்கொண்டிருந்ததைச் சைமன் அவதானித்து விட்டான்.
'என்னடாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறிங்க.... ஏதாவது விசேஷம் உண்டா?'
சைமன் கேள்வியைக் கேட்டதும் யேசுராசனும் மரியதாசனும் ஒருவரையொருவர் பார்த்தனர்.
'என்ன நடந்தது என்று சொல்லுங்க. ஆராவது சம்மாட்டிமாற்ற தொழிலில ஏறிவிட்டாங்களா....?'
சைமன் வார்த்தைகளில் சூடு ஏறியது.
'நாளைக்கு எல்லா சம்மாட்டிமாற்ற விடுவலைகளும் கடலில இறங்கப் போகுதுகள் போல இருக்கு.சம்மாட்டிமார் தொழிலாளிகளை விலைக்கு வாங்கிப் போடு வாங்க போல இருக்கு'.
சைமன் அதிர்ச்சியுடன் மரியதாசனைப் பார்த்தான். மரியதாசன் நிதானமாகப் பதில் சொன்னான்.
'சாமிநாதர் விடுவலைக்குப் போறதுக்கு சம்மதிச்சுப் போட்டார்'.
'ஏன்?'
'விடுவலைகள் நின்று போனதால் தொழிலாளிகள் எல்லாம் படுப்பு வலைக்கும் களங்கட்டி வலைக்கும்தூண்டலுக்குமாக போய்விட்டார்கள். ஆனால் பாவம் சாமிநாதன் மூன்று நாளாக தொழிலுக்குப் போகயில்ல.போறதுக்கு வேறு தொழிலும் கிடைக்கயில்ல. வீட்டில பட்டினி பொறுக்க முடியாமல் யோண் சம்மாட்டியிட்டபோய் கடன் கேட்டிருக்கிறார். அவன் விடுவலைக்கு வந்தால் கடன் தாரன் என்று சொல்லியிருக்கிறான்.சாமிநாதரும் சம்மதிச்சுப் போட்டார்'.
சைமனின் முகம் சுருங்கிக் கறுத்துவிட்டது. இப்படி ஒரு நிலையை இவன் எதிர்பார்க்கவில்லை. பலதலைமுறையாக இருந்துவரும் இந்தவித அடிமைப் போக்குகளை தகர்த்தெறிவது என்பது இலகுவான காரியம்இல்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டான். சைமன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
'அண்ணே, சம்மட்டிமார் நாளைக்காலம விடுவலைகளை எப்படியும் கடலில இறக்கிப் போட வேணும் எண்டுஇன்னும் ஆக்களைப் பிடிக்கிறதுக்கு வலைபோட்டுத் திரியிறாங்க. இப்டியே விட்டுவிட்டால் சாமிநாதர் போலஒவ்வொருத்தராகப் போய்ச் சோந்துவிடுவாங்க'.
குசினிக்குள் இருந்த பிலோமினா தேநீர்க் கோப்பைகளையும், சக்கரைக் குறுகல்களையும் கொண்டுவந்துகூடியிருந்தவர்கள் முன் வைத்து விட்டு கதை கேட்கும் ஆவலில் அறைக்கதவு அருகே போய் சாய்ந்தபடி நின்றுகொண்டாள்.
தேநீர் உறிஞ்சப்பட்டு கோப்பைகள் வெறுமையாகிக் கொண்டிருந்தன. சைமனின் சிந்தனையில் பலசம்பவங்கள் திரண்டு வந்தன. 'எத்தனை நாளைக்கு இப்படிச் சுருண்டு கிடப்பீங்க? தெரு நாய்கள், எங்கடகாலில தான் வந்து விழுவீங்க'. யோணின் பேச்சு இவன் நினைவில் வந்து மோதியது. உடல் ஒரு கணம்சிலிர்த்து அடங்கியது. பொத்திக் கொண்டுடிருந்த வலைகளையும் அப்படியே விட்டுவிட்டு விறுக்கென்றுஎழுந்தான். காது மடிப்புக்குள் செருகி வைத்திருந்த புகையிலைத் துண்டை எடுத்துச் சப்பிக் கொண்டேகனத்த குரலில் பேசினான்.
'இவங்கட வலைகள் கடலில இறங்கிற கெட்டித் தனத்தைப் பார்ப்பம். மரியதாஸ்! நீ சவிரியையும்,யோசேப்புவையும் கூட்டிக் கொண்டு சாமத்தில தெற்குத் தெருவுக்குப் போ. யேசுராசா! நீ சூசைமுத்து,செபமாலையோட கோயில் ஒழுங்கையைக் கவனி. நான் பெர்ணாந்தையும் சிலுவைதாசனையும் கூட்டிக்கொண்டு நடுத்தெருவுக்குப் போறன். ஆர் ஆக்கள் வெள்ளாப்பில வந்து தொழிலாளிகள அரட்டிறாங்க எண்டுபார்ப்பம்'.
'ஓம் அண்ணே! அதுதான் சரி'.
மரியதாசன் பதில் சூடாக வெளிவந்தது. எல்லோரும் எழுந்து கொண்டனர். சைமன் வளையில்சொருகியிருந்த துண்டை எடுத்துக் தோளில் போட்டுக் கொண்டே படலையைத் தேடி நடந்தான்.

பிலோமினா பயத்துடன் படலையைப் பார்த்தாள். முற்றத்தில் கிடந்த கறுவல் மறுபடியும் குரைத்தது. அவர்கள்படலையைத் திறந்து வெளியேறி இருளுக்குள் மறைந்தனர். தெருநாய்கள் ஆக்ரோசத்துடன் குரைத்தன.
வெகுதூரத்துக்கு அப்பாலும் அவர்களது அழுத்தமான காலடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தன.

















பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன...நாவாந்துறை- டானியல் அன்ரனி

பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன...

நாவாந்துறை- டானியல் அன்ரனி

மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க மூச்சு இரைக்க இரைக்க பிரதான ஒழுங்கையில் திரும்பினார். எதிரே ஜீப் வண்டியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஜீப்பைக் கண்டதும்

மரநிழலில் ஒதுங்கும் பாவனையில் கானோரத்தில் நின்ற பூவரச மரத்தடியில் நின்று கொண்டார்.

ஜீப் வண்டி அவரைக் கடந்து எதிர்த்திசையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கடந்து செல்லும் வேகத்திலும் கூட சவிரிமுத்தர் அவனைப் பார்த்து விட்டார்.

இரு பொலிஸ்காரர்களுக்கிடையில் பெருமாள் இருந்துகொண்டிருந்தான். அவனுடைய பெரிய கண்கள் சவிரிமுத்தரைக் கண்டு கொண்டதும் எதையோ அவசரத்துடன் கேட்க எத்தனிக்கும் வேளையில் வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது.

அவனுடைய கண்கள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்தரின் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.உடலில் ஒரு கணசிலிர்ப்பு. இனம்புரியாத இரைச்சல்கள். சோர்வுடன் நடந்தார்.

ஒழுங்கை நிறைய சனங்கள். படலை வாசல்களிலும் வேலிகளுக்கு மேலாலும் இன்னும் பலர். ஜீப் வண்டி சென்ற திசையை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் எதையோ பேசி விமர்சித்துக் கொண்டு அனுதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். எதையுமே கண்டுகொள்ளாதவராக சவிரிமுத்தர் நடந்து கொண்டே இருந்தார்.

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில் உடம்பு வேர்வையால் நனைந்திருந்தது.

அணிந்திருந்த மேற்சட்டையை களைந்து போட்டுவிட்டு சரு சருவென சடைத்து ரோமங்கள் வளர்ந்திருந்த வெறும் உடம்பை ஆசுவாசத்துடன் அங்கிருந்த ஈசிச்செயரில் சாய்த்துக் கொண்டார்.

கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி கனத்தது. விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்கள்.கருங்காலித் தடிக்கு ப10ண் போட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

ஆனாசி... ஆனாசி.... இவன் செல்லையா வந்தவனோ ?

சவிரிமுத்து போட்ட சத்தத்தில் குசினிக்குள் இருந்தவள் வெளியே வந்தாள்.

ஏன் இப்பிடி சத்தம் போடுறீங்க. இப்பதான் அவன் கொண்டுவந்து வச்சிற்றுப் போறான். சாருக்குள்ளதான் இருக்கு...

அதை எடுத்துக் கொண்டு வா....

ஆனாசி விசுக்கென்று சாருக்குள் சென்றாள். வரும்போது அவள் கையில் இருந்த போத்தல்களில் கள் நிரம்பியிருந்தது. சவிரிமுத்தரின் காலடியில் வைத்துவிட்டு இவள் மறுபடியும் குசினிக்குள் போய்விட்டாள்.

சவிரிமுத்தர் கோப்பையில் சிறிது கள்ளை வார்த்து பக்கத்தில் வைத்துவிட்டு புகையிலையைக் கிழித்து சுருட்டத் தொடங்கினார். அவருடைய சிந்தனை எதிலோலயித்திருந்தது.

என்னங்க ஒரு விஷயம் கேள்விப் பட்டாங்களோ. நம்மளோட தொழிலுக்கு நிண்ட பெருமாளையல்லோ பொலிஸ்காரங்கள் பிடித்துக்கொண்டு போறாங்க. குசினிக்குள் இருந்து ஆனாசியின் சத்தம் கேட்டது.

நானும் வழியில பார்த்துக் கொண்டுதான் வாறன். என்ன நடந்ததாம்.... சவிரிமுத்தர் உணர்ச்சியின்றிப் பேசினார்.

அவன் கள்ளத் தோணியெண்டு யாரோ பொலிசுக்கு பெட்டிசம் போட்டிட்டாங்களாம். அதுதான் அவனை

வந்து இழுத்துக் கொண்டு போறாங்கள். ஏனெண அவன இனிமேல் விடமாட்டாங்களா....

ஆனாசி வெளியே வந்து சவிரிமுத்தருக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். சவிரிமுத்தர் மனைவியை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். மெளனமாக கோப்பையிலிருந்த கள்ளை எடுத்து ஒருதடவை உறிஞ்சினார். அந்த மூச்சிலே கோப்பை முழுவதும் காலியாகி விட்டது.

ஆனாசிக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியும் புருஷன் அக்கறைப் படுத்துவதாக தெரியவில்லை.

ஏனெண உங்களுக்கு பொலிசில இருக்கிற பெரியவங்களத் தெரியுந்தானே. ஓருக்காய்ப் போய் என்னெண்டுதான் பாத்திட்டு வாங்கோவன்....

சவிரிமுத்தர் மறுபடியும் கள்ளை வார்த்து ஒரு முறடை உறிஞ்சி விட்டு கள்ளில் தோய்த்து விட்ட பெரிய மீசையை தடவி விட்டுக் கொண்டார்.

பேச்சி இதுகள் ஒண்டும் உனக்கு விளங்காது. என்னமாதிரித்தான் தெரிஞ்சவங்களெண்டாலும் லேசில இந்தமாதிரி விசயங்களை விடமாட்டாங்கள்.

ஆனாசி அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய்விட்டாள். சவிரிமுத்தர் சுற்றிவைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார். ஆனாசி கேட்டதற்காக ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் அவருடைய மனதில் பெருமாளின் விடயம் உறுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.

சவிரிமுத்தருக்கு நன்றாக நினைவிருந்தது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருக்கவேண்டும்.... தோணிக்காசுக்கு கொழும்புத்துறைக்குப் போவதற்காக யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் பெருமாளை சந்தித்தார்.

அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். கறுத்த மேனி. ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு. சிக்குப் பிடிக்காத தலைமயிர். காவி படிந்து முன்னோக்கி மிதந்து கொண்டிருந்த பற்கள். பெரிய கண்கள். பீத்தல் விழுந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பஸ் கிய10வில் நின்றவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் சவிரிமுத்துக்கு ஆனாசியின் நினைவு வந்தது. வெகுநாட்களாகவே வீட்டு வேலைக்கு ஒருவர் வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இவருடைய வலைக்கும் ஆள் பற்றாக்குறையாக இருந்தது.

~தம்பி.... இஞ்சால உன்னத்தான். இஞ்ச வா.... |

பெருமாள் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன வென்று விரித்துரைக்க முடியாத பாவம். அவன் சவிரிமுத்தர் அருகே வந்தான்.

~தம்பி உன்ரை பேரென்ன... |

~பெருமாளுங்க... |

~எந்த ஊர் மோன உனக்கு|

~பதுளையிங்க... |

~அப்ப வாச்சுப் போச்சு | என்று

மனதிற்குள் நினைத்தபடி சவிரிமுத்தர் தொடர்ந்தார்.

~அப்பா.... அம்மா.... இல்லையோ ? |

~அப்பா.... செத்துப் போட்டாரு. அம்மா தங்கச்சி தோட்டத்திலே வேலை செங்சிக்கிட்டு இருக்கிறாங்க.. |

~ஏன் உனக்குத் தோட்டத்திலே வேலை செய்யப் பிடிக்கேல்லையா ? |

~என்னோட வீட்டுக்கு வாறியா... ? உனக்கு சாப்பாடு தந்து உன்ர வீட்டுக்கும் காசு அனுப்பிறன் |

- தயக்கம்.

~ம்... சொல்லன் |

சரியிங்க.... |

அவன் சம்மதித்து விட்டான்.

பெருமாள் வீட்டுக்கு வந்த போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடுபிடி வேலைகளைக் கவனித்ததுடன் வலையில் பிடித்து விற்றதுபோக ஐஸ் போட்டு வைத்தல் போன்ற வேலைகளையும் கூட இருந்து செய்வான்.

அந்தத் தெருப்பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகிதர். அவனுடைய வயதுக்கு மூத்த அனுபவ அறிவும், அதனால் அவன் பேசும் பெரிய விசயங்களையும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள், கூட விளையாடும் சிறுவர்கள். எப்போதாவது அவர்களுக்குள் சண்டை மூழும். அவனைப் பார்த்து ~கள்ளத்தோணி| என்று பட்டம் சொல்லுவார்கள். ஆனால் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாதவன் போல உண்மையில் அவனுக்குப் புரியாமல் கூட இருக்கலாம்.- பேசாமல் இருப்பான். ஆனால் ~கரிக்கோச்சி| என்று மட்டும் அவனை யாரும் பேசி விட்டால் போதும் கோபம் தலைக்கேற, மூர்க்கத்துடன் - சொன்னவனை வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் அடங்கமாட்டான். பற்களை ~நறநற| வெனக் கடித்துக் கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான். வாயில் வந்த து}சண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான். சிலவேளைகளில் துண்டு பீடிகளைப் பொறுக்கி வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று குடிப்பதைச் சவிரிமுத்தர் கண்டிருந்தாலும் எதுவும் சொல்லுவதில்லை. ஏதாவது ஏசினால் ஓடிப் போய்விடுவான் என்றபயம். அவருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது.

சிலநாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கி விட்டான். தோணியில் பெருமாள் கால் வைத்தவேளை ~விடுவலையில்| கயல் மீன்அள்ளிச் சொரிந்தது. சில வருடங்களிலேயே சவிரிமுத்து பல லட்சம் பெறுமதியான தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய சம்மாட்டி ஆகிவிட்டார்.

மலைப்பாறையில் பிறந்து கடல் உவரில் ஊறிய பெருமாளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோளங்கள் புடைத்து நிற்கும் பருவத்தை எட்டிவிட்டான் பெருமாள் அவன் உழைத்த பத்து வருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டு பீடி, ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா பார்க்கக் காசு ... இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத்தவை.

பத்து வருடங்களாக தாய் சகோதரியை காணாமல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடாரென ஏனோ ஊருக்கு போக வேண்டுமென்று மனம் பேதலித்தது. வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியாரிடம் வெளியிட்டு, ஐநு}று ரூபா காசு கேட்டான். சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடியாகிவிட்டது. பெருமாள் செய்யும் வேலையின் பழு, அவனை இழந்தால்... அவன் திரும்பிவராவிட்டாலும்... ? அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதனால் பல நாட்களாக கடத்தி வந்தார்.ஓவ்வொரு நாளும் பெருமாளின் ஊமை முணுமுணுப்பு இரைச்சலாகி வெடித்தது. ஒருநாள் ஊதியம் எதுவுமின்றியே வெளியேறிவிட்டான்.

அடுத்த நாள் சவரிமுத்துவின் பரம விரோதி பேதுருவின் நைலோன் வலையில் சேர்ந்து விட்டான் என்ற செய்தியை சவிரிமுத்து அறிந்தபோது அதிர்ந்தே போய் விட்டார்.

- அந்தப் பெருமாள் இப்பொழுது பொலிசில்.

~என்ன சம்மாட்டியார் கனக்க யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க|.

அப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்த குத்தகைக்காரன் யோணின் இன்னொரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் குத்தகைக்காரனிடம் நீட்டினார். ... ....

~என்ன வி~யம் குத்தகை... இந்த மத்தியான நேரத்தில| சவிரிமுத்து வினவினார்.

~ஒண்ணுமில்லை சம்மாட்டியார்... | நேற்று சுவாமியார் கூப்பிட்டு இந்த முறை பெருநாள் நல்ல முறையில கொண்டாட வேணும் எண்டு சொன்னார்.

~ஓ... அதுக்கென்ன... சிறப்பாகச் செய்வம்.... |

சொல்லிக் கொண்டே சவிரிமுத்து கோப்பை முழுவதையும் காலி செய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினார்.

குத்தகைக்காரர் மீண்டும் தொடர்ந்தார்.

~இந்த முறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எல்லாம் உங்க பொறுப்பு.... | குத்தகைக்காரர் இப்போது தானே போத்தலை எடுத்து நிரப்பிக்கொண்டார்.

~அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கிவிடுறன். |

கோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது. குத்தகைக்காரர் நிதானத்துடன் பேசினார்.

~ஒரு விஷயம் கேள்விப்பட்டியளோ... உங்களை விட்டுப்போட்டு பேதுருவட வலைக்குப்போன அவன் தான்... பெருமாள், அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலிசட்டைப் பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்களாம் ஆரோ... |~ஓம் ஓம்... நானும் வழியில பாத்தன். பாவம் பெருமாள். நல்ல பெடியன்.| சவிரிமுத்து அரைமயக்கத்துடன் அனுதாப வார்த்தைகளைக் கொட்டினார்.

~அப்ப நான் வரப்போறன் சம்மாட்டி| என்று கூறிக்கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக நடந்தார்.

சவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார். பருந்துகள் எதையோ தேடிப்பறந்து கொண்டிருந்தன.

முற்றும்.

torsdag 13. mars 2014

நண்பேன்டா குழுவினரின் கருத்துக்கு எதிர்ப்பு ஆவணம்!


நண்பேன்டா குழுவினரின் கருத்துக்கு எதிர்ப்பு ஆவணம்!                                                                             11.03.2014


Navanthurai.com கருத்துக்களத்தில் அண்மையில் நான் வெளியிட்ட கட்டுரைகள் சம்மந்தமாக சில கருத்துக்கள் தற்போது நண்பேன்டா
மின்னஞ்சல் மூலம் முன்  வைக்கப்பட்டுள்ளன. முதலில் பெயரிட
ப்படாத அநாமதேய மாற்றுக் கருத்துக்களை ஆசிரியர் தமது 
இணையத்தளத்தில் வெளியிட்டதே தவறான செயல். இருந்த போதி
லும் தனது கருத்துக்களை இது சம்மந்தமாக தெரிவிப்பது தனது கட மையென நினைத்தது  சில வேளைகளில் அவருக்குச் சரியாகப்பட்
டிருக்கலாம்.
நண்பேன்டா மின்னஞ்சலுக்குப் பின்னால் இருக்கும் சிலர் தாம்தான் 
ஒட்டு மொத்த சமூகம் என நினைக்கிறார்கள போலும். ஆனால் இவ
ர்கள் ஏனைய சமூகத்தினருக்குப் பயந்துதான் தமது பெயர்களை 
வெளியிட மறுக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. சர்வதேச அமை
ப்பின் உருவாக்கத்திற்கு முன்ன தாக 1998ம் ஆண்டு முதல் குடாக் கரையிலிருந்து சந்தைவரையுள்ள எமது கடற்கரைப் பகுதியை எமது மக்களின் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டு மென்று திட்டங்கள் 
தீட்டி புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் பிரச்சா ரங்கள் மேற்
கொண்டு வந்தேன் (என்னிடம் எழுத்துமூல ஆதாரங்கள் தற்போதும் உள்ளன). அன்றிலிருந்து இன்று வரை கடற்கரையில் திட்டங்கள் 
கொண்டு வந்த காரணங்களுக்காக என்னைப்பழிவாங்க வேண்டு
மென்று சிலர் துடிக்கின்றனர். இதைக்கண்டு நான் அஞ்சப்போவதி
ல்லை. மனித வாழ்வில் எதிர்ப்புகள் என்பது சாதாரண விடயம்.
கடந்த 2009ல் பிரான்சில் நடைபெற்ற சர்வதேச ஒன்று  கூடலில் 
எடுக்கப்ப ட்ட கலாச்சார மண்டபத்திட்டம் சம்மந்தமான தீர்மானம் நடைமுறைக்கு வராததற்குரிய காரணங்களில் திரு மொன்மொலின் ஜெறாட்டிற்கு எதிரான காழ்ப்புணர்வும் ஒரு காரணம் என முன்
னைய  செயலாளர் திரு ஆசீர்தாசன் சர்வதேசத்திற்கு எழுதிய தனது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இணையத்தில் வெளியான சர்வதேச அமைப்பு சம்மந்தமான எனது கட்டுரையைப்பார்த்த புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் பலர் என்
னைத் தொடர்பு கொண்டு இப்போதுதான் எமக்கு உண்மை தெரிந்தது 
எனக் கூறிவருகின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே சர்வதேச அமைப்பில் நான் முக்கிய பதவிகள் 
வகித்துள்ளேன். இதில் அங்கம்வகிக்கும் சில நாடுகள் மற்றும் ஒரு 
சில நிர்வாக அங்கத்தினர்களின் செயற்பாடுகள் சம்மந்தமாக விமர்ச னங்கள் முன்வைக்க ப்பட்டன. ஆனால்இ இன்றுவரை நான் எனது பதவியை துர்பிரயோகம் செய்ததாகவோ அல்லது சர்வதேச அமை ப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நான் செய ற்பட்டதாகவோ எந்தப் பதிவுகளும் சர்வதேச அமைப்பில் இதுவரை இல்லை. நண்பேன்டா குழுவினரிடம் நான் கேட்பது என்னவென்
றால் உங்களால் முடியுமென்றால் ஊரில் ஒன்று கூடல் ஒன்றினை ஒழுங்குசெய்து அதில் சர்வதேசப் பிரதிநிதிகளை கலந்து கொள்ள
வையுங்கள். அதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் சுயமாக தமது கருத்துக்களை முன்வைப்பார்கள. அப்போதுதான் உண்மை எதுவெ
ன்று (நண்பேன்டா குழுவினர் கூறும் சமூகத்தினர் அல்ல) ஏனைய சமூகத்தினர் புரிந்துகொள்வர்.
இக்கோரிக்கையைத்தான் எமது குருவானவர் நோர்வே வந்தபோது 
நான் முன்வைத்தேன். முடியுமானால் இந்த ஒன்றுகூடலை ஒழு ங்குபடுத்திக் காட்டுங்கள் பார்க்கலாம.; இனிவரும் காலங்களில் 
பெயர்கள் இல்லாமல் வெளியிடும் கருத்துக்களை இணையத்தளத்
தில் பிரசுரிக்கவேண்டாமென்று ஆசிரியரிடம் நான் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் சமுதாயத்தைச் சீர்திருத்த நினைப்பவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படை யாகவும் ஆணி 
த்தரமாகவும் முன்வைப்பார்கள். தமது  பெயர்களை வெளியிடாது ஒழிப்பவர்கள் உண்மைகளையும் ஒழிப்பவர்களாகத்தான் அர்த்தம்!                                                         நன்றி

இசிதோர் மொன்மொலின் ஜெறாட்11.03.2014

onsdag 12. mars 2014

நாவாயூரன் வென்சலாஸ் அனுரா நெல்சன் மன்டேலா கவிதை

கறுப்பு வைரம் நெல்சன் மன்டேலாவின் மறைவுக்கு எம் கவி நாவாயூரன் வென்சலாஸ் அனுரா அனுப்பி வைத்த கவிதை தென் ஆபிரிக்க அரச முக நூலில் வெளிவந்தது.  தென் ஆப்ரிக்க அரசு அனுப்பிவைத்த மின்னஞ்சலை கீழே பார்வையிடலாம்.
தென் ஆப்ரிக்க அரசு அனுப்பிவைத்த மின்னஞ்சலை கீழே பார்வையிடலாம்.

From:
GatewayCC (GatewayCC@sita.co.za)
Sent:
December-11-13 5:14:30 AM
To:
anura arullappu (anura1274@hotmail.com)
நல்ல நாள்

தென் ஆப்பிரிக்க அரசு உங்கள் அன்பான வார்த்தைகளை 
நன்றி கூற விரும்புகிறேன். ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 
மரபு வாழ முடியாது.இரங்கலை தென்னாபிரிக்க அரசு பேஸ்புக்  பக்கம் அன்று அல்லது உங்கள் செய்திகளை பதிவு குடும்பம்  மற்றும் ஜனாதிபதி பகிர்ந்து மேலும் தலைமுறைகளாகஆவண  வேண்டும் எங்கே நீங்கள் 0800 314 446 அழைக்க முடியும்.
அவரது இறுதி சடங்கு பற்றிய மேலும் தகவலுக்கு 
http://www.mandela.gov.za/ பார்வையிடவும். நன்றி.

Batho பீலே தொடர்பு மையம்