søndag 13. september 2015

திரு அன்ரனி தங்கககுமாரன் அவர்தான் உதைபந்தாட்டத்தின் பின்ணனி நட்சத்திரம்


          
அவர்தான் உதைபந்தாட்டத்தின் பின்ணனி நட்சத்திரம்!
                       எல்லோராலும் சின்னண்ணன் என்று அன்போடு அழைக்கப்படும் அமரர் திருவாளர் . அன்ரனி தங்கக்குமாரன் அவர் கள் (பிறப்பு 21. 05.1946 -இறப்பு 27.09. 2013) சிறப் பாக சிறுவயதில் இருந்தே நமது புனித மரியாள் விளையாட்டுக்கழக போட்டிகள், குறிப்பாக 100 மீட்டர், நீளம் பாய்தல் போன்ற மெய்வல்லுணர் போட்டிகளில் என்றும்  முதல் இடத்தில் இருப்பவர். சிறுவயதில் இருந்து உதைபந்தாட்ட த்தில் ஆர்வமும், திறமைகளும் இருந்ததினால், பெரியவர்களும், சக நண்பர்களும் ஏன் நாவந்துறை மக்கள் முழுவதுமே, திரு தங்கக் குமரன் அவர்கள்  சிறந்த விளையாட்டு வீரனாக விளங்குவர் என்று எதிர்பார்த்தார்கள். எங்கள் ஊர்மக்களின் எண்ணங்கள் வீண்போகவி ல்லை, எல்லோரி எண்ணப்படியும் ஆசைப்படியும அவர் சிறந்ததோர் பின் அணி வீரனாக  உதைபந்தாட்டக்களங்களில் ஓர  நட்சத்திரமாக ஜொலித்தார்.
                                                 இருபது ஆண்டுகளுக்கு மேலாக யாழ் தெரிவுக்குழு கோஷ்டியில் நிரந்தர வீரனாகவும், பல  ஆண்டுகளாக அக்குழுவுக்கு தலைவராக விளங்கி யாழ் தெரிவுக்குழு கோஷ்டிக்கு பெருமை சேர்த்தவர்திரு தங்கககுமாரன் அண்ணன் அவர்கள் யாழ் தெரிவுக்குழு கோஷ்ட்டியில் விளையாடும் போது, ஆற்றிய சாதனை கள் எத்தனையோ எத்தனையோ!  இருபத்தி ஐந்து வருடங்களாக, எமது புனித மரியாள் விளையாடுக் கழகத்தில், நிரந்தர வீரனாக, பின் அணி நட்சத்திரமாக விளையாடி பல சாதனைகளை படைத்தவர் இவர்.
                                              1970 களுக்கு முன்னர், திரு அன்ரனி தங்கககுமாரன் அவர்களும், எமது வாழ் நாள் சாதனையாளர் ( The Living legend) திரு,  மணி  மரியதாஸ் அவர்களும், முதன் முதலாக, புனித மரியாள் விளையாட்டு கழகத்தில் இருந்து, யாழ் உதைபந்தாட்ட தெரிவுக்குழு ஊடாக, அகில இலங்கை தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதாற்காக, நாவாந்துறை மண்ணில் இருந்து, முதன் முதலாக சென்றிருந்தார்கள். பரிபூரணமான தகுதிகள்திறமைகள் இருவரு க்கும் இருந்தும் கூட, அகில இலங்கை தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. இதற்கு அவர்களது தனிப்பட்ட காரன ங்களே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

                                                பின் அணி நட்சத்திரம் அமரர் திரு, தங்கக்குமார் அண்ணனின் விளையாட்டு இலாவகம், திறமைகள், அவரின் விளையாட்டு மதிநுட்பங்களை சொல்லிக்கொண்டே போக லாம். அவர்தான் அந்தகாலத்திலேயே, மிகவேகமாக பந்தடிக்கும் வீர ர்களின் வரிசையில் முன்ணனிவகித்தவர் என்பதை நான் திட்டவ ட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்இதுமட்டுமல்ல, நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்த சம்பியன் போட் டிகளில் அவ ரது அபார தடுக்கும் திறத்தால் Defence Skill பல வெற்றிகளை எமது விளையாட்டு கழகம் குவித்துள்ளது. சில சந்தர்பங்களில் போட்டியா
னது சம நிலையில் இருக்கும் போது, இவரின் தனிப்பட்ட தடுப்பு திறமையால் பல தோல்விகளை எமது விளையாட்டு கழகம் தவிர்த்து ள்ளது.
                                          எத்தனையோ போட்டிகளில், எதிர் அணி யிணர் தொடுக்க இருந்த கோல் இலக்குகளை அடையாளம் கண்டு, தனி ஒருவனாக நின்று, தனது சாதுரியத்தினால் அதனை தடுத்து நிறு த்தியுள்ளார்நான் பார்த்த சில போட்டிகளிலும், நான் அவரோடு சேர் ந்து விளையாடிய போட்டிகளிலும், எதிர் அணியினர் குறிப்பாக சொல்லப்போனால், Singin Fish, St Anthony போன்ற முண்ணனி எதிர் அணியிணர் விளையாடும் போட்டிகளில் கூட, எதிர் முன் அணி வீர ர்களின் தாகுதல்களை தனி ஒருவனாக துணிந்து எதிர்கொண்டு தடு த்துள்ளார். எதிர்தரப்பு வீரர்கள் கோல்முகத்தை நோக்கி, முனைப்பு டன் முன்னேறி, கோல் நோக்கி, பந்தை உதைக்கும், ரசிகர் கூட்டம் கோல் என்று கோஷம் எழுப்ப, தங்கமான தங்கக்குமாரன் அண்ணன்,
புலிப்பாய்ச்சலாக பாய்ந்து, பீரங்கி தாகுதல் போல பந்துக்கே உதைப் பார் அன்றி ஒருபோதும்  எதிர் அணியின் கால்களுக்ககு அல்ல!. அவர் தான் விளையாடும் விளையாட்டில் ஒருபோதும் தவறாக விளை யாடி, நடுவர்களிடம் இருந்து தண்டனை பெற்றவரல்ல.எதிர் அணி யினரின் பார்வையாளர்கள் தமது அணிக்கு கோல் கிடைக்கப்போகி ன்றது என்று உட்சாக மிகுதியால் கோஷம் இடும்போது, அந்த மும்மு ரமான தாக்குதலை வெற்றி கொண்டு எமது கழக ஆதரவர்கலின் சந்தோசமாக பல தடவைகளில் மாற்றி அமைத்துள்ள பெருமை அம ரர் திரு தங்கக்க்குமாரர் அவகளையே சாரும் என்பதை அவரின் அனு பவாயிலாக நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
                                                       
                                         திரு தங்கக்குமார் அண்ணன் அவர்கள் போட்டியின் போது அல்லது பயிற்சியில் விளையாடும் போதும்அவரிடம் இருந்து நிறைய விளையாட்டு நுட்பங்களை நாங் கள் கற்றுக்கொண்டுள்ளோம். விளையாடும் போது அவரின் அங்க அசைவுகள் Body Language வித விதமான நுட்பங்களை அவ்வப்போது வெளிப்படுத்தும்பந்தில் அவரது பாதம் படும் ஒவ்வொரு கோண மும், பந்து செல்லும் திசையை மாற்றி அமைக்கும், பாதம் பந்தில் படும்போது இடிபோன்ற‌  ஓசையும், பந்து செல்லும் வேகம் மின்ன லைப்போல மின்னி மறையும். அவரின் அடி உதையால் திண்டாடி தட்டுத்தடுமாறி, அவர் அடிக்கும் பந்தை பிடிக் முடியாமல், கோல் எல்லைக்குள் சாய்ந்து விழுந்த கோல்  காப்பு வீரர்கள் எதிர் அணியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒன்றை  மட்டும் நான்  துணிந்து சொல்வேன். அந்தக்காலத்தில், வேகத்தை அதாவது அவரது கால்,
பந்தில் பட்டு செல்லும் வேகத்தை அளக்கும் கருவிகள இருந்திருக்கு மேயனால் , அவர  தான் அபார வேகப்பந்து உதையாளராக முன்ன ணியில் இருந்திருப்பார்  எனபது எனது திட்டவடமான எண்ணமா கும். அவரின் அடிவேகம் மட்டுமல்ல அவரது விளையாட்டு மதி நுட்பமும் மிக திறமையானது.
        
                                                          நான் போ ட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பந்து ஓய்வான சமயம் பார்த்து, Living Legend மணி அண்ணனும், திரு, தங்கக்குமாரன்  அண்ணனும் என்னை தனி யாக அழைத்து, விளையாட்டில் வெற்றி கொள்ளும் நுட்பங்களை யும் வியூகங்களையும் சொல்லித்தருவார்கள்.  அவர்களின் ஆலோச னைப்படி, என்னை தனியான இடம் பார்த்து நிற்கச்சொல்வார்கள்.
பின்னர் எதிர்பாராமல் மிகத்தூரத்தில் இருந்து எனக்கு பந்தை அனு ப்பி, பல கோல்களை இலகுவாக அடிக்கும் வாய்ப்புகளை இந்த இருவருமே எனக்கு தந்துள்ளார்கள்.
                                                 அமரர் திரு தங்கக்குமாரன் அண்ணன் அவர்களை பற்றியும் அவரின் சாதனைகள் திறமைகள் பற்றி நிறைய சொல்லலாம். அவரின் தனிப்பட்ட குணங்களும் அருமையானவை பெயருக்கு ஏற்றால் போல தங்கமான தன்னடக்கம் உள்ள மனிதர். பெருமையடித்துக்கொள்ளதாத திறமைமிக்க ஓர் பின் அணி மாவீரர் உண்மையில் அவர் ஒரு நட்சத்திரம் என்று தான் சொல்லுவேன். என்னுடைய அடுத்த முயற்ச்சியாக எமது விளையாட்டு கழகத்தின் வாழ்நாள் உதைபந்தாட சாதனையாளராக திகழும், Living Legend
திரு. மரியதாஸ் மணி அண்ணன் பற்றியும், அமரரான முன்னாள் விளையாடு வீரர் திரு டாணியல் அன்ரனி, முன்னாள் முன்னணி வீரரும் Cool Mind உள்ள சிந்த வீரரும், பல வெற்றிகளை எமது கழகம் பெறுவதற்கு காரணமாக இருந்தவருமான திரு, அடைக்கலம் இவர் களைப்பறிய வெளியீடாக அடுத்த மடலில் தர ஆசைப்படுகின்றேன். எமது உதைபந்தாட்ட வீரர்களின் சரிதம் தொடர்ந்து வரும், அடுத்த மடலில் சந்திக்கும் வரை,
                        அன்புடன்  பாலசிங்கம் பிரான்ஸிஸ் (ரெட்ணசிங்கம்)