onsdag 15. april 2015

ஒன்றும் புரியிதில்லை


ஒன்றும் புரியிதில்லை
ஒன்றையும் புரிவார் இல்லை
கண்டவர் பின் சென்றே காரியம் பெறுவோரிடம்
கண்ணியம் தான் காணலாமோ?...
உண்ட நற்றிக்காய் உண்மையை மறைப்போரின்
உள்ளங்கள் தான் உண்மையென்று அண்டி சென்று
அடிமையாகிப் போனோர் பலர்.....

சத்தியம் இன்னும சாகவில்லை என்பதனை
சத்தியமாய் உணர்ந்திடும் நாள் தொலைவில் இல்லை....
சாவு உன்னை சாடும் முன்பு..
பத்திரமாய் நன்மை செய்து நற்பெயர் பெற்றிடுவாய்
நாளை உன் வாழ்வுதனை நாயகனாய் மாற்றிடுவாய்....
நிச்சயம் வெல்லும் நோ்மையே என்பதனை
இன்றைய உயீர்ப்பின் செய்தியாக நம்பிடுவாய்.....

ஆசீர் அன்ரனி