fredag 26. desember 2014






ஆண்டாண்டு காலமாக ஆரவணைத்த அன்னையம்மா                                       
அன்னை என்று நாமிருந்தோம்-
கடல் அன்னை என்று நாமிருந்தோம்          
தாயவளே சேயவற்ரை அழித்து விட்ட மாயமென்ன

விடுமுறை தின மென்று ஆனந்தமாய் உறங்கையிலே         
ஆங்காங்கே முற்றமதில் சிறுவரவர் விளையாடையிலே         
கண்ணிமைக்கும் நேரமதில் நடந்த தென்ன ஐயையோ

மேலெழுந்து வீறு கொண்டு பாய்ந்தாயே எம் மீது
நீ போனவுடன் கண்டதுவே முலிவான பிணங்களம்மா            
காலின்றி கையின்றி தலையின்றி உடலின்றி                              
எத்தனை உயிர்களம்மா- நீ எம்மை விட்டு எடுத்ததுவோ

ஆயிரமாம் பல் ஆயிரமாம் நிலங்களெங்கும் உடல்களம்மா
அடையாளம் காண்பதற்கேஆட்களுக்கே தெரியவில்லை
எதிர்காலச்சந்ததியை கருவோடு அழித்தாயே 
ஏனிந்த சாபமம்மா ஏதுமற்ற எங்களுக்கு


 நீலக் கடலம்மா நினைக்கையிலே பதறுதம்மா
 எத்தனை குடும்பமம்மா. தாயின்றி தந்தையின்றி
 கணவனின்றி மனைவியின்றி பிள்ளையின்றி தவிக்குதம்மா-
 நீ செய்த கொடுனையினால்

 இயற்கை தந்த அன்னையம்மா-நாம் இன்னல் பட்ட இனமம்மா
 இன்னலென்ன எம் வாழ்வில நிலையான சாபம் தானா?
 சேய்யாதே மீண்டுமிந்த கோரப்பசித் தாண்டவத்தை
 கொஞ்ச முள்ள எம் இனத்தை காவு கொள்ளப் பார்க்காதே
                        கவிஞர் நாவாய+ரான்
                  வென்சலாஸ் அனுரா கனடா