søndag 9. juli 2017

திரு. டாணியல் அன்ரனி மற்றும் திரு. பறுனாந்து அடைக்கலம் இருவரையும் பற்றிய உதைபந்தாட்ட பார்வை!

திரு. டாணியல் அன்ரனி மற்றும் திரு. பறுனாந்து அடைக்கலம் இருவரையும் பற்றிய உதைபந்தாட்ட பார்வை!


                                                             டாணியல் அன்ரனி அவர்கள் யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்டக் கதாநாயகன் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இவருடைய காலத்தில் தான், யாழ் மத்திய கல்லூரி, யாழ்ப்பாண அரசாங்க பாடசாலை களுக்கிடையிலான உதை பந்தாட்ட போட்டியில் முதன் முத லாக யாழ் மத்திய கல்லூரி சம்பியன் கின்னத்தை தட்டிக்கொ ண்டது. (புனித பரியோவான் கல்லூரி, புனித கென்றி அரசர் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, பருத்திதுறை ஹார்ட்லி கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கு பற்றுவதில்லை)  இந்த இறுதி போட்டியில், யாழ் மத்திய கல்லூரியும், தெல்லிப்பளை மஹா ஜன கல்லூரியும் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டது.  இந்த ஆட்டத்தில்  யாழ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட கதா நாயக னான திரு டாணியல் அன்ரனி அவர்களின் அபார விளை யாட்டி னால் அவரே இரண்டு கோல்களை போட்டு, யாழ் மத்திய கல்லூரி சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது. இந்த விளை யாட்டில் சிறப்பாக விளையாடிய, திரு டாணியல் அன்ரனி அவ ர்களை யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் அவரைத்தூக்கி தங்கள் தோளில்களில் சுமந்து, அரை மணி நேரம், அவர்களை தரையில் விடாமல் தங்களின் கால்லூரியின் வெற்றியை கொண்டாடினார்கள். இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்ட மக்கள் எவ்வளவோ ஆனந்தப்பட்டார்கள். சிறியவானக இருந்த நான் இதனை பார்த்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். இவ ரைப் போல நானும், ஒரு உதைபந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதயமானது

                                                                இதன் பின்பே திரு டாணியல் அன்ரனி அவர்களின் பிரவேசம், நாவாந்துறை சென் மேரிஸ் உதைபந்தா ட்ட கழகத்திற்கு வந்தது. வந்த அவருக்கு அங்கே வரவேற்பும் காத்திருந்தது. அவருடைய சிறுவயது நண்பனும்,  நாவாந்துறை சென் மேரிஸ்  உதைபந்தாட்ட கோஸ்டியின்சிறந்த முன்னணி வீரனும், Cool mind விளையாட்டு வீரனும், சிறந்த பந்து பரிமாற்று வீரனும், Game maker வீரனுமான திரு,பறுணாந்து அடைக்கலம் அவர்களும் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு  இருவ ருக்கும் கிட்டியது.  திரு, டாணியல் அன்ரனி அவர்கள் பந்துடன், ஓடும் போது, மிகவும் அழகாக இருக்கும். ஓடும் போது பந்து அவ ரின் கால்களுடனே பந்து போகும். இரண்டு மூன்று அடிகளுக்கு மேல் போகாது. மேல் வலது, இடது பாதத்தினால்தான் பந்தை தட்டிக்கொண்டு போவார். எதிரணியினர் அவரிடம் இருந்து பந்தை வெற்றிக்கொள்வது என்பது மிக கஸ்டம். போட்டிகளின் போது கோல் அடிக்கும் திறமை ( Finishing) என்பது இவருடன் கூடப் பிறந்தது.   நான் சிறியவனக இருந்த போது,  இவருடைய விளை யாட்டை இரசித்து, அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டிருக்கின்றேன். திரு டாணியல் அன்ரனி அவர்க ளின் கோலடிக்கும் நுட்பம் எனக்கு நன்றாக பிடிக்கும்.

                                                                                                                                                                                                                       நாவாந்துறை உதைபந்தாட்ட வரலாற்றில், மிகவும் நுட்பமாக, Place பண்ணி கோலடிக்கும், வித்தையை முதலில், எங்கள் சென் மேரிஸ் கோஸ்டிக்குள் புகுத்தியவர் திரு டாணியல் அன்ரனி அவர்கள் என்றால் அது மிகையாகது. இவ ரைப்பார்த்துதான் நானும் நுட்பமாக  இடம் பார்த்து ( Placing Ball) அடிக்கும் திறமையைக் கற்றுக் கொண்டேன். இதனை நான் என்றும் மறக்கமாட்டேன். என் தந்தையின் கனவை, என் தந்தை யினாலும், எனது உதைப ந்தாட்ட வழிகாட்டிகளான திரு, மணி அண்ணன் அவர்கள்,  திரு, அன்ரனி தங்கக்குமரன் அவர்கள், திரு ப அடைக்கலம் அவர்கள், திரு, டாணியல் அன்ரனி அவர்கள் இவர்கள் மூலமாக நிறைய கற்றுக்கொண்டவன் என்றதனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

                                        திரு பறுணாந்து அடைக்கலம் இவர் என்னுடைய சிறிய தந்தை, இவரையும் இவருடைய உதைபந்தாட்டத் திற மைகள் பற்றியும், நாவாந்துறை மக்களும் , மற்றும் யாழ் மாவ ட்ட மக்களாலும் நன்கு அறியப்பட்டவர்.  ஒரு காலத்தில் திரு ப.அடைக்கலம் மணியண்ணன் அன்ரனி தங்கக்குமாரன், டாணி யல் அன்ரனி இவர்களைத் தெரியாதவர்கள் யாழ் மாவட்டத்தில் இருக்க முடியாது. இவர்களுடைய காலத்தில் தான்,   சென் மேரிஸ் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணங்களை முதன் முறையாக  வெற்றி கொள்ள தொடங்கியது. இவர்களுடைய காலங்களில் தான்    சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் முதம் முறையாக வெற்றி கொண்டது . எனது பெரிய தந்தை துரை சிங்கம் அவர்தான் அந்த காலத்தில் விளையாட்டு தலைவராக இருந்தவர். நமது சென் மேரிஸ் கழகத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பறியது.

                                              இன்னுமொரு திறமை என்னெவென்றால் சென் மேரிஸ் உதைபந்தாட்ட வரலாற்றில், விளையாட்டு தலை வராகவும்,  சிறந்த முன்னணி வீரனாகவும் விளையாடி பல இறு திப்போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்ட தென்றால் அது மிகையாகாது. அந்த சரித்திர நாயகன் தான் திரு,ப அடைக்கலம் அவர்கள். விளையாடியும், விளையாட்டு தலைவராகவும், இருந்து பல சாதனைகளை புரிந்தவர் என்றல் அதில் ஆச்சரியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விளை யாட்டு வீரன் தான் திரு ப. அடைக்கலம் அவர்கள். இந்த மாபெ ரும் விளையாடு வீரன், ப.அடைக்கலம் அவர்கள், விளையாடும் போது நிறைய விளையாட்டு நுட்பங்களை பார்த்து கற்றுக்கொ ண்டிருக்கின்றேன்.  விளையாடும் போது இலகுவில் எதிரணி வீரர்கள மீது முட்டமாட்டார். போட்டிகளின் போது எந்த கஸ்ட மான‌ சூழ் நிலையிலும் இலகுவாக பந்தை வெற்றி கொள்வார். போட்டிகளின் போது, பந்து பறிமாற்றம் செய்வதில் திரு அடை க்கலத்தை மிஞ்ச வீரர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

                                        இவரிடம் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு பந்து கொடுப்பது இவரின் கைவந்த கலை. திரு டாணியல் அன்ரனி, மணியண்ணன் மற்று ம் வீரர்களுக்கு பந்து கொடுத்தால் அது கோலாகத்தான் இரு க்கும். அப்படி தன்னுடன் விளையாடிய வீரர்களுக்கு மிக இல குவாக பந்துகளை கொடுப்பார். எத்தனையோ உதை பந்தாட்ட போட்டிகளின் வெற்றிக்கு இவரின் பந்து பரிமாற்றம்  மிகவும் சிறப்பான காரனமாக இருந்தது. போட்டிகளில் இவருடைய வலது காலின் முன் பாதத்தை வளைத்து எடுத்து, அந்த பந்து எதிரணியிடம் சிக்காமல், தகுந்த நேரத்தில், உரிய இடத்துக்கு அந்த பந்தை கொடுத்து பல போட்டிகளின் வெற்றிக்கு காரன மாக இருந்திருக்கின்றார். பந்தினை தலையால் அடிப்பதில் இவர் கெட்டிக்காரர். கோணர் கிக் அடிக்கும் போது இவரின் தலையில் பந்து பட்டால் அது நிட்ச்சயம் கோலாகத்தான் இரு க்கும். இவரின் உடல் கட்டமைப்பும், தலையின் வடிவமும், இவரின் விளையாட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. குறி பார்த்து,  தலையால் பந்தை கோல் அடிப்பதற்கு,  இவரின் தலை அமைப்பு மிகவும் பொருத்தமாக இருந்தது.இவரின் உடல் கட்ட மைப்பு பந்துகளை சரமாரியாக, உரிய இடங்களுக்கு உரியவர்க ளுக்கு கொடுப்பதற்கு, ஏதுவாக இருந்தது என்பது மிகையாகாது.

                                   இந்த நேர‌த்தில் ஓர் உண்மை சம்பவத்தை நான் உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகின்றேன். ஏறத்தாள பதி நான்கு வருடங்களுக்கு முன்னர் எனக்கு வயது46  அந்த நேரத்தில் லண்டனில் தமிழ் மக்களின் மிக முன்னணிக்கழகமான WEST 3 உதைபந்தாட்ட கழகத்தில் முக்கிய வீரனாக Mid Field இல் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்தக்காலத்தில், தற்போது நோர்வே நாட்டில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக இருக்கும் எனது மருமகன் சுரேன் ஜெராட், என் தம்பி ரெம்சி இருவரும் என்னுடன் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நடந்தது. அந்த போட்டி, West 3 உதைபந்தாட்ட கழகத்திற்கும், வல்வை  Blues விளையாட்டு கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது.  நாங்கள் விளையாடிய  West3 விளையாட்டுக்கழகம் சிறப்பாக விளையாடி சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. 

                                                          போட்டியின் முடிவில் வெற்றிக்களிப்பில் வெளியே வந்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், சிறிய வயதிலிருந்து என் விளையாட்டை பார்த்து ரசித்து வந்த நண்பர் அவருக்கு என்னைவிட ஆறு வயதுதான் அதிகம். அவருடைய பெயர் சிவநாதன் அவர் அச்சுவேலியைச் சார்ந்தவர்.   சுன்னா கம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் படித்தவர் நல்ல விளையாட்டு வீரனும் கூட. அவர் என்னைக்கண்டு, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அது என்னவென்றால் " Francis  ஒரு விடயத்தை அவதா னித்தேன். நீங்கள் உதைபந்தாட்ட போட்டிகளில் விளையாடி க்கொண்டிருக்கும் போது, உம்மிடம் பந்து வரும் முன்பே, உம்மி டம் வரும் பந்தை அடுத்ததாக எங்கு அனுப்பவேண்டும் என்ற சரியானஇடத்தை தெரிந்து வைத்து, அதனை உரிய நேரத்தில் உரிய நேரத்திற்கு அனுப்புகின்றீரே இந்த திறமை, எப்படி உம்மி டத்தில் வந்தது, எப்படி இதனை நீர் கற்றுக் கொண்டீர் என நானும்,  வெளியில் உனது விளையா ட்டைப்பார்த்தவர்களும், மிகவும் ஆச்சரியப்பட்டோம். எப்படி உமக்கு இந்த திறமை வந்தது என அவர் என்னிடம் கேட்டார். 

                                              நான் அதற்கு மறுமொழியாக உண்மைதான் இந்த திறமை என்னுடன் சிறுவயதில் இருந்தே வந்தது. ஆனால் எனது சிறிய தந்தைஅடைக்கலம் என்ற ஒரு சிறந்த வீரன் நாவா ந்துறை சென் மேரிஸ் உதைபந்தாட்ட‌ விளையாட்டுக்கழகத் விளையாடி இரு ந்தார். அவரிடம் இருந்தே நான் இந்த விளையா ட்டு நுட்பத்தை கற்றுக்கொண்டேன் என்று கூறினேன்.  திரு, அடைக்கலம் என்பவர் மைதானத்தில் விளையாடும் போது, முன்கூட்டியே மைதானத்தின் விளையாட்டின் போக்கை அவதா னித்து, தன்னிடம் வரும் பந்தை, அடுத்த கட்டமாக முன் கூட்டியே அறிந்து, அதனை மிகச்சரியான இடத்திற்கு செலுத்தும் நுட்ப த்தை, முன் கூட்டியே அறியும் விளையாட்டு ஞானம் கொண்ட வர். அப்படிப்பட்ட மகா கெட்டிக்காரன். அதாவது முன்கூட்டியே மைதானத்தை அவதானித்து, உரிய நேரத்தில் அடுத்த கட்டமாக பந்தை செலுத்தும் ஆற்றல் கொண்டவர். அவரிடம் அதாவது திரு.ப அடைக்கலம் என்ற முன்னாள் சென் மேரிஸ் வீரனிடம் இருந்தே இதனை கற்றுக்கொண்டேன். என பதில் அளித்தேன். 

                                                          அதற்கு திரு, சிவநாதன் இதற்கு மறுமொ ழியாக " Francis இந்த குணம் தானுன்னில் எனக்கு பிடித்த முதல் விடயம். உனக்கு வழிகாட்டிய வீரர்களையும், சிறந்த வீரர்களை யும் நீங்கள் மதிப்பதில்தான் உங்கள் புகழும் உயரும், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று பதில் அளித்தார்.  அது எவ்வளவு உண்மை! ஒரு வீரன் நான் என்ற அகம்பாவத்தை மறந்து, நம் முன்னோடிகளான சிறந்த வீரர்களை மதித்து,  நம் சக வீரர்களுக்கும் மதிப்பு கொடுத்து, ஒழுக்கத்துடனும், அடக்க த்துடனும், நாம் எந்த விளையாட்டையும் விளையாடி வந்தால் நிட்ச்சயம், நாம் ஒரு நாள் சிறந்த வீரர்களாக திகழ்வோம் இது உண்மை!
                                                                       திரு டாணியல் அன்ரனி அவர்களின் விளையட்டு விதத்தையும், உருவ அமைப்பையும் உற்று நோக்கி னால், உலக புகழ் பெற்ற பிரேசில் வீரன் Seiko  மனதுக்குள் கொண்டு வரும். திரு டானியல் அன்ரனி அவர்கள் சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தில் ஓரிரண்டு வருடங்களே சாதனை படை த்தார். தொடர்ந்தும் சாதனை படைக்கமுடியாத படி அவரது காலில் ஏற்பட்ட injury காரனமாக அவர் தொடர்ந்து விளையாட முடியாதபடி விளயாட்டில் இரு]ந்து ஒதுங்க்கியது நாவாய் மக்க ளுக்கும் இரகிகர்களுக்கும் மன வேதனையே! இதே போலவே திரு  ப, அடைக்கலம் அவர்களின் உருவ அமைப்பையும், விளை யாட்டு திறனையும் உற்று நோக்கினால் அவரும் பிரேசில் நாட்டு புகழ் பெற்ற  வீரன் சோக்கிரட்டீஸை மனதுக்குள் கொண்டு வரும், இதை நான் சொல்வதை விட நீங்களே உற்று நோக்கினால் நீங்களே ஒத்துக்கொள்வீர்கள். 

                                              திரு டானியல் அன்ரனி  அவர்கள் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் விளையாடி இருந்தாலும் இருபது வருடம் விளையாடிய சாதனையை அவர் நிலை நிறூத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.  அதே போன்று திரு ப. டைக்கலம் அவர்களும் ஒரு சீரான விளையாட்டு வீரனாக இன்றும் ம்க்கள் கருதுகின்றனர். பல ஜாம்பவான்களுடன் நான் விளையாடியிரு ந்தாலும், இந்த இருவருடனும் விளையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லையே என்று இன்று நான் கவலை கொள்கின்றேன்


                                                               இவர்களைப்பற்றி நிறைய எழுதிக் 
கொண்டே போகலாம், ஆனல் இந்த சாதனை வீரர்களுக்குப் பின்னால் ஒழுக்கம், கீழ்ப்படிவு, நட்பு போன்ற வற்பண்புகள் இவர்களுக்கு இருந்தபடியால் இந்த வீரர்களால் சாதனை வீரர் களாக மாறினார்கள். என் அனுபவத்தின் பணிவான வேண்டு கோள் எமது வளரும் எதிர்கால சந்ததியினருக்கு கூறிக்கொள்ள ஆசைப்படுவது,  விளையாட்டு மட்டுமல்ல, நமக்கு முக்கியமா னது விளையாடும் காலத்தில்,  ஒழுக்கம், கீழ்படிவு, நட்பு இவை களை கடைப்பிடித்தால், உங்க்ளுக்கு என ஒரு இடத்தை சரித்
திரத்தில் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லிக்கொண்டு அடுத்து வரும் விளையாட்டு ஆய்வில் உங்களை சந்திக்கி ன்றேன். அதுவரையும் அன்பு வணக்கம் கூறி விடை பெருகின் றேன் வன்றி, வணக்கம் . 
                 

                                    அன்புடன் பாலசிங்க்கம் பிரான்ஸிஸ்

அடுத்துவரும் விளையாட்டு ஆய்வு திரு. மைக்கல்தாஸ் அவர்க ளைப்பற்றிய தாகும். நான் அவருடன் விளையாடிய காலங்களில் நான் சிறுவனாக இருந்த படியால். அவர் பற்றிய மேலதிக தக வல்களை, பிள்ளைகள் சகோதரர்கள். உற்ற வண்பர்களிடம் இரு ந்து எதிர்பார்க்கின்றேன். எனது கைதொ லைபேசிக்கு அனுப்பி வைக்கவும்   0044 7404260413)

)