இராவணேசன் இசைக்கூத்து
( பின்ணனி இசையில் ஆ என்ற ராக மெட்டு இசைக்கப்படுகின்றது அந்த
மெட்டுக்கு ஏற்றபடி கதை சொல்பவன் மேடைக்கு வருகின்றான்)
கதை சொல் : இராமனின் சரிதம் மிக நீண்டதொரு சரிதம்! இறுதியில் வருவதோ யுத்தம்,,,, பெரும் யுத்தம்! (பின்ணனி கோரஸ்
சத்தத்துடன்)
இலங்கையில் நடைபெற்ற யுத்த நிகழ்வுதனை ஆடலின் கூத்தோடு நிகழ்த்திக்காட்டவே ஆடலை இங்கு தொடக்கினோம்!
இராம காதையின் நாயகன் இராமன்.
யுத்தகாதையின் நாயகன் இராவணேசன்!
இராவணன் இல்லையெனில் இராமர் புகழ் இல்லை. இராவணன் இல்லை எனில்
இராமாயனமே இல்லை. கர்வத்தின் சின்னம், கலைகளின் சின்னம், வீரத்தின் சின்னம்
வித்தையின் சின்னம், பக்தியின்சின்னம், பலமதின் சின்னம், பாசத்தின்
பாவத்தின் சின்னம், இத்தனை புகழ் பூண், இராவணன் தோன்றும் மெத்தனம் மிகும்
அவைமேவுவோம் வாருங்கள்!
( சங்கொலி பின்ணனியில் இசைக்கின்றது, கூடவே தாளமும்)
ராஜ ராஜ, ராஜன் போற்றும், ராஜமகா ராஜன் வந்தான்.
ராஜ ராஜ, ராஜன் போற்றும்,
ராஜமகா ராஜன் வந்தான்
ராஜ ராஜ, ராஜன்
போற்றும்,
ராஜமகா ராஜன் வந்தான்
ராஜ ராஜ, ராஜன் போற்றும்,
ராஜமகா ராஜன் வந்தான்
இராவணன் ராஜ ராஜ, ராஜன் போற்றும்,
ராஜமகா ராஜன் வந்தான்
ராஜ தீரன் கொலுவில் வந்தானே!
(தாளக்கட்டு) தகதிகதா திமிதக தெய் தக,
தாத தெய்ய தா தளாங்கு தளாங்கு ததிங்கிண
தக தக, தக தக, திகு திகு திகு
திகு,
தளாங்கு தித்தக தக ததிங்கின தோம்
இராவணன் வீர தீர வீரர் எல்லாம், வந்தடிபணியும்
வீரன்!
வீர
தீர வீரர் எல்லாம், வந்தடிபணியும்
வீரன்!
(பின்ணனி) வீர தீர வீரர்
எல்லாம், வந்தடிபணியும்
வீரன்!
வீர
தீர வீரர் எல்லாம், வந்தடிபணியும்
வீரன்!
இராவணன் தென்
திசைக்கோன்! தென் திசைக்கோன்!
தென்
திசைக்கோன் கொலுவில் வந்தானே
தென் திசைக்கோன் கொலுவில் வந்தானே!
தாளக்கட்டு தகதிகதாம் தகதிகுதாம்
தகதிகதாம் தகதிகுதாம்
தலாங்குதோம் தலாங்குதோம்
தலாங்குதோம் தலாங்குதோம்
தான நானா தான நானா தான நானானே
தான நானா தான நானா தான நானானே
தான நானா தான நானா தான நானானே
தான
நானா தான நானா தான நானானே
( இராவணன் மேடைவிட்டு
விலகுகின்றான்.
கொட்டொலியுடன் இருவர் மேடைக்கு வருகின்றனர்.
டம் டம் டம் டம் டம்)
கொட்டொலியுடன் இருவர் மேடைக்கு வருகின்றனர்.
டம் டம் டம் டம் டம்)
Narrator போர்பறை முழங்கின! புவிப்பறை அதிர்ந்தது,
பார் விழித்தெழுந்தது!
போர்பறை முழங்கின!
புவிப்பறை அதிர்ந்தது,
பார் விழித்தெழுந்தது!
படையணி திரண்டன! படையணி திரண்டன!
படையணி திரண்டன! படையணி திரண்டன!
அனுமனோடு அங்கதன், தலைவன் சுக்ரீவன்
அக்கினி நீலன், அறிவுசால் சாம்பன்!
தலைமைகள் தாங்கிட,
திசை தொறும் பரவி
சப்த சமுத்திர படைபலம் தொடர்ந்திட
இலக்குவன் தம்பி நிழலாய் தொடர
இராகவன் வருகின்றான்
இராகவன் வருகின்றான்
ஹோ! ஹோக ஹோ!
ஹோ! ஹோக ஹோ! ஹோ! ஹோக ஹோ!
ஹோ! ஹோக ஹோ! ஹோ! ஹோக ஹோ!
ஹோ! ஹோக ஹோ! ஹோ! ஹோக ஹோ!
( வானரப்படைகள் சகிதம் இராமர் மேடையில் வந்து சுறி சுறி
வலம் வந்து ஆடுகின்றார்)
வலம் வந்து ஆடுகின்றார்)
இராமன் விருத்தம்: சீதையை விடவேமாட்டேன் செருக்களம
வருவேனென்று
தூதற்கு இராவணேசன் சொல்லிய
வார்த்தை கேட்டு
தீரனாம் அங்கதன் பின், செயல் வீரன
, தம்பி சூழபோர்க்களம் நாடி
இராமன்
புறப்பட்டுவருகிறனே!
தாளக்கட்டு தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
இராமன் படைகள் எல்லாம் ஒன்றாய்க்கூட்டுவோம்
அவன் பத்து தலைகளை வெட்டி வீழ்த்துவோம்
அவன் பத்து தலைகளை வெட்டி வீழ்த்துவோம்
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
நடைபோட்டு நாம் வீரம் காட்டுவோம்
நாளை நமதென்று நமதென்று காட்டுவோம்
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
ராகவன் நான் தரும் சத்தம் இனி
இலங்கையில் எங்கும் ஒலிக்கும் நித்தம்
இலங்கையில் எங்கும் ஒலிக்கும் நித்தம்
வா தம்பி வீரர்கள் வாருங்கள் கூடுங்கள்
வா தம்பி வீரர்கள் வாருங்கள் கூடுங்கள்
வா தம்பி வீரர்கள் வாருங்கள் கூடுங்கள்
வா தம்பி வீரர்கள் வாருங்கள் கூடுங்கள்
வருகின்ற களமதில் வாகை சூடிவர
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
தாய்தந்தோம், தரிகிட தொம் தோம்
தரிகிட தாய் தந்தோம், தாய்தந்தோம்
தரிகடத்தோம் தாய்தந்தோம்
( இராமர் சேணை மெடை விட்டு விலகுகின்றது)
Narrator (விருத்தம்)
அங்கதன் தூது வந்து போன பின்னர்
அமர் புரிய ராவணனும் தேரிலேறி,
சங்கொலிக்க முரசொலிக்க
சேனை சூழ சம்ர்க்களத்தை நாடியே
பாய்ந்து வந்தான்
( பின்ணனியில் உடுக்கு சத்ததோடு இராவணன்ன் நிற்கின்றான்)
மங்களஞ்சேர் துணை நிற்க, வானரங்கள் அனேகம் புடை சூழ
பொங்கு சமர்க்களத்தில் ராமன் நின்றான்,,,,,
புகழுற்ற இராவணனை நேரிலே கண்டான்!
இராவணன் சங்கரன்
கொடுத்த வாளும், தண்டும்
என் கையில்
பாராய்!
இங்கென்னை
வெல்வதற்கு
இகத்திலே
எவருமில்லை
பங்குகள் செய்வேன் உன்னை,
படுகளம் எனக்கு சொந்தம்!
இங்கு நான் வீரன் நீ கோழை!
இராவணன் தரு எதிர் நிற்காய் ஓடுவாய்
அல்லால் எனக்கு பதிலுரை கூறுவாயே
அல்லால் எனக்கு பதிலுரை கூறுவாயே
எண்டிசை வென்றவன் நானே
என்முன் துரும்பு நீதான்
எண்டிசை வென்றவன் நானே
என்முன் துரும்பு நீதான்
மண்டியிடுவாய் அல்லாமல்
மாண்டு மடியச்செய்வேன்
தாம் தெய்ய தாம் தளாங்கு
தாம்!
இராமன் வீராவன் நீயோ! எங்கள் விபீடன் அண்ணன் நீயோ
தேவரை
அடக்கியாண்ட திறனுளோன்
என்பான் நீயோ
போரிட வந்தாய் பின்னர்
போரிடு, பேச்சேனிங்கே
யாரிடம் வீரம் உண்டு
அதைக்காண்போம் எதிரிலே நீ வாடா
அடடா ராவணா
ஆர்ப்பரித்து கொக்கரிக்காதே
அடடா ராவணா ஆர்ப்பரித்து கொக்கரிக்காதே
நித்திய வீரனோ நீதான்,
நின்பலம் அடக்க வந்தேன்
கத்திக்கொண்டே கிடக்க,
கதையை துண்டாடுவேன்
தாம் தெய்ய தாம் தளாங்கு தாம்!
தாம் தெய்ய தாம் தளாங்கு தாம்!
தாம் தெய்ய தாம் தளாங்கு தாம்!
தாம் தெய்ய தாம் தளாங்கு தாம்!
(காதாயுதம் கீழே விழுகின்றது இராவணன்ன்
தடுமாறி கலங்குகின்றான்)
தடுமாறி கலங்குகின்றான்)
இராமன் விருத் : கையிலே பல்மிழந்து,
கவலைகள் நெஞ்சில் கொண்டு
வெய்யதோர் மூச்சைக்காட்டும்,
வீரனே வார்த்தை கேளாய்!
தையலை விடுக, அல்லால் சமர் செய்க,
மனக்கிலேசம் எய்தற்க உனை விட்டேன்.
இன்று போய் நீ நாளை வா!
இன்று போய் நீ நாளை வா!
இன்று போய் நீ நாளை வா!
இன்று போய் நீ நாளை வா!
கதை சொல்பவன்: வாரனம் பொருத மார்பும்!
வரையினை எடுத்த தோளும்!
நாரத முனிவனுக்கேற்ப,
நயம்பட உரைத்த நாவும்!
தாரணி மவுலி பத்தும்,
சங்கரனார் கொடுத்த வாளும்!
களத்திலே போட்டு,
வெறுங்கையோடு இலங்க போனான்!
வெறுங்கையோடு இலங்க போனான்!
வெறுங்கையோடு இலங்க போனான்!
வெறுங்கையோடு இலங்க போனான்!
(இராவணன் மேடை விட்டு விலகுகின்றான்)
பின்ணனி : இன்று போய் நாளை வா என்றானே ராமன்!
இசையில் இந்த வார்த்தை அம்பைவிட நோவே
இந்த வார்த்தை அம்பைவிட நோவே
இந்த வார்த்தை அம்பைவிட நோவே
இந்த வார்த்தை அம்பைவிட நோவே
இராவணன் இன்று போய் நாளை வா என்றானே ராமன்!
இந்த வார்த்தை அம்பைவிட நோவே
இன்று போய் நாளை வா என்றானே
ராமன்!
இந்த வார்த்தை அம்பைவிட நோவே
மண்டோதரி இந்த நேரம் சிந்தனை செய்தீர் மன்னா!
எதிரி பலமாய் என்பத
உணர்வீர்!
இராவணன் மானமெல்லாம் போனபின்பு ஒரு வாழ்வோ தாழ்வோ
மடியமுன்னர் ராமனுக்கு
தாழ்வே
மண்டோதரி போர் தொடர்ந்தால், புதல்வரோடு தம்பி சுற்றம்
போர் விரும்ப ரட்சதரும் மடிவார்
இராவணன் கும்பகர்ணன்! கும்பகர்ணன்!
இந்ரஜித்தன் இந்ரஜித்தன்
எனது மைந்தன் உள்ளான் வந்து எனது
பக்கம்
நின்று பகை வெல்வான்
மண்டோதரி என்னைக்கேட்டா, என் மகனை களம் தான்
செல்ல
எப்படித்தான்
முடிவு செய்தீர் சொல்க!
இராவணன் கும்பகர்ணன், கும்பகர்ணன் தம்பி
கும்பகர்ணன்
உள்ளான் சமரில்
தாவி வரும், தாவி
வரும், பெரும் படை வெல்வான்!
மண்டோதரி ஆண்கள் எல்லாம், போர் புது மாள்வீர் வெல்வீர்
ஆண்கள் எல்லாம், போர் புரிந்து மாள்வீர் வெல்வீர்
அவர்கள் பெண்கல்,
பிள்ளைகள் நிலை பாரீர்
போரை பெண்கள் நாங்கள்
ஏற்கோம்!
எங்கள் புருசர் பிள்ளைகள்
போரில்
மடிவதை பர்ப்போம்!
போரை பெண்கள் நாங்கள் ஏற்கோம்!
எங்கள் புருசர் பிள்ளைகள் போரில்
மடிவதை பர்ப்போம்!
இராவணன் நிலை இழந்தேன் தலை கவிழ்தேன் நானே!
நிலை இழந்தேன் தலை கவிழ்தேன்
நானே!
நிலை இழந்தேன் தலை கவிழ்தேன்
நானே! நீயும்
நிற்காதே செல்! நிற்காதே செல்!
நிற்காதே செல்!
தனிமை வேண்டும் தானே!
தனிமை வேண்டும் தானே!
தனிமை வேண்டும் தானே!
கதை சொல்வோன்: நிலைதனை இழந்த நெஞ்சம்!
குழம்பியே இராவணேசன்
தலை கவிழ்ந்து இருந்தான் ஆ,,,ஆ
தலை கவிழ்ந்து இருந்தான்
தலை கவிழ்ந்து இருந்தான்
பின்னர் தடுமாற்றம் நீங்கி,
தம்பி மலைபோல்வான்
கும்பகர்ணன் தனை அழை என்றான்!
மன்னர் நிலை கேட்டு,
கும்பகர்ணன் கும்பகர்ணன்
அண்ணனை காண வாரான்!
அண்ணனை காண வாரான்! ஆ ஆ,,,,
கும்பகர்ணன்: தூங்கும் நாள்! தூங்கும் நாள், முடிய முன்பே
சுருக்குடன் எனையழைத்தீர்!
இங்கு என்ன
நடந்ததையா?
ஏன் மிக விசனம்
கொண்டு
வாங்குகின்றீர்
வாங்குகின்றீர்
பெரு
மூச்செல்லாம்வனவரெல்லாம் வந்திங்கு
ஆணவம் காட்டினரா?
கலைக்கவா கொல்லவா
சொல்!
இராவணன் தம்பியே கேளாய்! தம்பியே கேளாய்!
வாமன் வந்தான்
சமர்க்களம் நாடி
அம்பினால் எனை
வென்றான்
அவனை வெல்வதற்கு அவனை
வெல்வதற்கு
நம்பி நான் உனையழைத்தேன்
அவனை வெல்வதற்கு
நம்பி நான் உனையழைத்தேன் அவனை
வெல்வதற்கு
கும்பர்கண்ன் ஆனதோர் சண்டை (2)
சானகி துயர் போனது மிலையோ
வானகம் சிரிக்குமே வார்த்தை கேள்,
எனதண்ணா! (3)
சீதையை விடுத்து நீயும்
சிரி ராமன் உறவாவாய்!
இராவணன் உபதேசம் செய்யவோ உனையழைத்தேன்!
ஓடிப்போய் தூங்கு அபகீர்த்தி
இராவணன் தம்பியர் கோழையா
அவனை வெல்வதற்கு இங்கு யாருமே இல்லையா?
கும்பகர்ணன்: சின்ன வயது முதல் அன்னை போல
வளர்த்த அண்ணா
உனைவிடவும் உயர்ந்த
பொருள் எமக்கு உண்டா?
மன்னவனாய் உனைப்பார்த்து
மகிழ்த
எம் கண்கள்இன்னொருவனை
இங்கு கானவும்
கூடுமோ அண்ணா எனை
வென்றாரெனில்
உனையும் வெல்லுதல் உண்மை!
சின்னவன் வார்த்தை என்று
தட்டிவிடாதீர் அண்ணா!
இற்றை நாள் முதலாய், பிழைகள்
நான் செய்தால்
அதனையும்
பொறுத்து,,,,,ஆ,,ஆ,ஆ
ஆசீர்வாதம் தாருங்கள்
அண்ணா! ஆ,,,,, ஆ,,,ஆ!
பின்னனி இசை
விருத்தம் வென்றிவன் வருவேன் என்று உரைத்திலேன்
விதியும் வந்து,
முந்தியே பிடர் பிடித்து உந்தியே நின்றதண்ணா!
பொருந்துவன் களத்தில் நானும்,
பொன்றிநாற் சீதை தன்னை
விடுத்து நீயும் நலமுடன் புவியாள் அண்ணா!
கதை சொல்: இராவணன் வார்த்தை கேட்டு,
கும்பகர்ணன் படைகளோடு
கொந்தலர் மாலை பல அணிந்து
பேய்கள் பூட்டிய
கொடுந்தேர் மேலேறி
போர்க்களம் புகுந்தான்!
(
கும்பகர்ணன் போர்க்களம் கும்பகர்ணன் இறக்கின்றான்)
எட்டினோரிரண்டினாய், திசைவென்று தந்த
தம்பி,
பட்ட அச்செய்தி கேட்டு பதைத்தனன்
இராவணேசன்!
( மெல்லிய மத்தள அடி இசை)
வீழ்வதோ எனது வீரம்! போவதோ புகழ்
என்றெண்ணி
ஆள் சூழ் சிங்கனோடு நீலனை
அனுப்பிவைத்தான்!
( மெல்லிய மத்தள அடி இசை)
சிங்கனும் நீலன், மற்றும் செய்ய வீரர்
மாண்ட பின்னர்
( மெல்லிய மத்தள அடி இசை)
இணையற்ற வீரரெல்லாம் இழந்தவன் செயலிழந்தான்!
( மெல்லிய மத்தள அடி இசை)
இருக்கின்ற வீரர் எல்லாம் எழுந்தெதிர்
பெருக என்றான்!
இராவணேசன்: அனுப்பினேன் வீரர் எல்லாம்,
அனைவரும் இறந்தனர் ஐயோ!
எனக்கு இப்பரீட்சைதனை
ஏன் வைத்தாய் ஏன் வைத்தாய் இறைவா!
இனி இங்கு பொறுப்பதில்லை- என்
மகன் இந்திரஜித்தை அழைத்துவா
பிரம்மாஸ்திரத்தோடு அனுப்பி
நான் பகைவெல்ல
இந்திரஜித் வரவு: அண்ட பகிரண்ட முதல்
எண்டிசையும் உள்ளவர்கள்
அஞ்செலன்றபயமிடவே!
அண்ட பகிரண்ட முதல்
எண்டிசையும் உள்ளவர்கள்
அஞ்செலன்றபயமிடவே!
ஆணையோடு தேர்க்குதிரை
காலாட்கள் சூழவே!
அந்தணர்கள் ஆசி கூற,,,,,,,
ஆணையோடு தேர்க்குதிரை
காலாட்கள் சூழவே!
அந்தணர்கள் ஆசி கூற,,,,
மண்டலம் புகழ்கின்ற மண்டலம் புகழ்கின்ற
இந்திரஜித்தனும் இந்திரஜித்தனும்
தந்தையை காண்பதற்கு
மாயரதம் ஏறியே மாயரதம் ஏறியே
பேய்கள் நின்றாடவே பேய்கள் நின்றாடவே
வந்தனன் இச் சபைதனிலே!
தாளக்கட்டு : தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,,,
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,
தகதத் தகதத் தகதத்
தகதத் தகதத் தகதத்
தாம் தாம் தக
தகதத் தகதத் தகதத்
தாம் தாம் தக
தகதத் தகதத் தகதத்
தீம் தா தக
தெய்யத் தில்லான
தீம் தா தக
தெய்யத் தில்லான
தோ திந்த தா தக
தீம் தா தக
தீம் தந்தத் தோதிந்தத்
தோதிந்தத் தோதிந்தத்
தகஜொனதா திகஜொனதெய்
தகஜொனதா திகஜொனதெய்
இந்திரஜித் தரு: இந்திரர் முதலாயுள்ள இமையவர்
முனிவர் யாவரும்வந்தடி வணங்கி
வாழ்த்தும் மன்னனே சரணமையா!
எந்தையே எனைப்பெற்ற சுவாமியே
எனையிங்கு வந்திட அழைத்த செய்தி,
வளமுடன் உரைத்திடுவீர்!
இராவணேசன்: சிங்கனுடன் மகரக்கண்ணன்,
தீரனாம் குருதிக்கண்ணன்
நுந்தையாம் கும்பகர்ணன்
அனைவரும் களத்தி மாண்டர்
இங்கிது பொறுக்கவில்லை,
என்செய்வேன் என் மைந்தா!
சென்றுவா பிரம்மாஸ்திரத்தை
செலுத்திவா பகைவர் முன்னால்
இந்திரஜித் கந்தார்த்தம் விருத்தம்:
என் சிறிய தந்தையை கொன்றும்,
பின் உயிரோடு இருக்கின்ற
மனிதர் எவரோ? உன் வீரம் அறியரோ!
உன் மகனை அறியாரோ!
உலுக்கு புதுமை இவரே,
முன்னமே எனைவிட்டால்
அன்னவரை வென்றுங்கள்
முடிபணிய வைத்திருப்பேன்.
இன்னுமேன் தாமதம்
நான் களம் சென்றுடுவேன்!
தாளக்கட்டு : தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,,,
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,
இராவணன் மதிற் புரத்து ஓரத்தில்
மாற்றான் வந்து
வலிமை பல பேசுகின்றான்
என்றறிந்து குதித்தெழுந்த
எனைப்பார்த்து கும்பிடென்றான்
குறைவுற்றாள் உன் தாயார்
கோழி கோழை!
எதிர்த்திடுவேன் எனவுரைக்கும்,
எனது மைந்தா!
ஈன்ற பொழுதைவிட இன்றுதானே!
குதிக்குதடா எனது நெஞ்சம்!
சென்று வாராய்!
தாளக்கட்டு : தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,,,
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,
(போர்க்கள காட்சி )
கதை சொல்பவன் : இதோ! இதோ! இதோ!
இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
தாதிங்கின ததுமிதிங்கன, தாதிங்கின ததுமிதிங்கன
தங்கின தங்கின தங்கின தங்கின
பிண்ணனி இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
தாதிங்கின ததுமிதிங்கன, தாதிங்கின ததுமிதிங்கன
தங்கின தங்கின தங்கின தங்கின
தாதிங்கின ததுமிதிங்கன, தாதிங்கின ததுமிதிங்கன
தங்கின தங்கின தங்கின தங்கின
இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
இந்திரஜித்தா! இந்திரஜித்தா! இந்திரஜித்தா!
இலக்குவணன் : இந்திரஜித்தா எங்கே எங்கே?
எந்தன் கண்கள் அங்கே! அங்கே
இந்திரஜித்தா எங்கே எங்கே?
எந்தன் கண்கள் அங்கே! அங்கே
இலக்குவன் : வீரனாம் இலங்கை வேந்தன் மைந்தனே இந்திரஜித்தா
மாயமாய் போர்கள் செய்து ஆற்றாது ஓடிப்போனாய்
போரிலே முதுகு காட்டல் வீரருக் அழகாகுமாமோ?
போரிட வாந்தாயில்லை, உயிர் விட வந்தாய் இங்கே!
இந்திரஜித் : வீரனோ நீயும் சீச்சீ! விபிடன் உதவியோடு
நேரிலே எனை வெல்லாது சூழ்ச்சியால்
எனை வென்றாய் பாவி!
நாணுண்டு வில்லுண்டு நானஞ்சுவேனோ கண்டு
போரிலே என்ன பேச்சு? புறப்படு அமர்க்களம் செய்வோம்!
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தரிகிடதா தரிகிடதா தரிகிடதா தரிகிடதா
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தரிகிடதா தரிகிடதா தரிகிடதா தரிகிடதா
( போர் தொடங்குகின்றது இலக்குவன் அம்பு பட்டு அம்மா என்று அலறி மாய்கின்றான் இந்திரஜித்!)
Narrator: தையின் மேல் சுமந்த கையாள்
தணலின் மேல் மிதக்கின்றாள் போல்
நிலையின் மேல் மிதக்குந்தாளன்
நேசந்தான் நிறைந்த நெஞ்சன்
கொலையின் மேல் குறித்த வேடன்
கூர்ங்கணை உயிரை கொல்ல
மலையின் மேல் மயில் வீழ்ந்தன்ன
மன்னன் முன் மறுகி வீழ்ந்தாள்!
( இராவணன் முன் மண்டோதரி மண்டியிடுகின்றாள்)
மண்டோதரி தரு: மாண்டு மடிந்தானே - மகனே
மறந்துமண் மீதினில் வாழ்வேனோ நான்
அம்மா என்றழைப்பானே! ஐயோ
யாரை அழைத்தானோ நானறியேன்!
புத்திகள் பல சொன்னானே - ஏசிப்
போருக்கனுப்பினாயே ஐயா நீ
சத்துருவால் மாண்டனே - இனி
சாவதொன்றே நானறிந்த வழி!
இராவணன்: முடி பணி அறிந்திடாது மூவுலகாண்ட என்னை
அடிபனிந்தாளவைக்க அவாவுறான் விதி போலும்!
கதியற்றேன், தம்பி மாண்டான், தனத்தை வென்று
வீரப்பதி பெற்றான். என் மைந்தன் படை வீரர்
எல்லாம் மாண்டார்! வென்றில்லன் என்ற போதும்
வேதமுள்ளளவும் நானும் நின்றுள்லளேன் அன்றோ!
இன்றே போகின்றேன் போர்க்களம் நாடி பெண்ணே!
(இராவணன் போர்க்களம் புகின்றான்)
Narrator: சித்திர முடியது நெற்றியில் ஒளிசெய்ய
தேவர்கள் கண்டோட
வெற்றிக்கவசம் மார்பிலிலங்கிட
வீரர்கள் கோஷமிட
மத்தளமதிர வெற்றிச்சங்கின்
வாழ்த்தொலி வானதிர
பத்து தலைநகர்க்கதிபதி இராவணன்
தேர்தனில் ஏறுகின்றான்
தாளக்கட்டு : தகஜொனு தகதிமி, தாம் தாம் தெய்ய
தகஜொனு தகதிமி தெய்ய
தாம் தாம் தெய்ய
நாதருதானி தோம் தருதானி
தாம் தாம் தெய்ய
நாதருதானி தோம் தருதானி
தகதொம் தகதிமி
நாதருதானி தோம் தருதானி
தாம் தாம் தெய்ய
Naraator: வரி சிலை கையில் வளைத்தெடுத்து
வானவர் களி கொள்ள
ஒரு தனி அனுமன் அங்கதனுடனே
உயர்படை பின் செல்ல
எரிபடு பாணம் தெரிந்தெடுத்து
இராவணன் எதி செல்ல
தேவர்க்கதிபதி அளித்த தேரில்
இராகவன் ஏறுகின்றான்
தாளக்கட்டு: தத்தித்தாம், தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம், தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம், தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய
இராமன்
வீரனே இரவணா! இழந்த ஆயுதங்களை பெற்றுவிட்டாயா?
காயங்கள் எல்லாம் ஆறிவிட்டதா? சமரை ஆரம்பிக்கலாமா?
அல்லது இன்று போய் நாளை வருவாயா?
இராவணன்
வீரனே இராமா! உன் சொற்களால் என்ன சுட்டெரிக்காதே!
உன் சொற்கள் நீ செலுத்தும் அஸ்திரங்களை விட கொடியது!
உன்னால் நான் துன்பமுற்றேன் ஆயினும் மானமும் வீரமும்
ஈழ மகனுக்கே சொத்தானது எனவே நான் போராடுவேன்
போராடுவேன் போராடுவேன் போராடுவேன்
( போர் போர் என்ற ஒலி பின்ணனியில் ஒலிக்க போர் தொடங்குகின்றது
இறுதியில் மாவீரன் இராவணன் மண்ணில் சாய்கின்றான். அதைக்கேட்டு மண்டோதரி வருகின்றாள்)
Narrator: உலகமெல்லாம் வென்று ஆண்ட
தனிச்செம்மல் தமிழன் நெஞ்சில்
பலமிக்க அம்பு பாய்ந்து
பறித்ததே உயிரை அம்மா!
புகழொடும் இளைஞரோடும்
புன்னகையோடு வாழ்ந்த மாவீரன்
தமிழன் மண்ணிலே வீழ்ந்தான்!
நிலமக்ள் அவனை தழுவிக்கொண்டள்!
வீரனைக்களத்தில் ராமன்
வெங்கணையால் சாய்த்தான் என்று
தூதர்கள் சொல்லக்கேட்டு
துடி துடித் தோடிவந்து
நாதனைக்கண்டாள் வீழ்ந்தாள்!
புரண்டாள் பின் இராவனேசன்
சாதனை எல்லாம் சொல்லி
தையலாள் அழுகின்றாளே!
மண்டோதரி: வீரம் வீரம் என்று விரும்பி உரைத்தீர் ஐயா! இன்று
விதியுன்னை படுகளம் வீழ்த்தி சிரிக்குதே மெய்யாய்
மூவுலகாண்ட முடி! நிலம் படுகுதே ஐயா!
ஒரு பாவிபோல் கிடக்கின்றீர் பக்கபலமிருந்தும் மெய்யாய்.
வாளெங்கே? கதையெங்கே? மார்பெங்கே?
எனை அணைத்திட்ட வைரத்தோளெங்கே?
எல்லாம் தொலைந்து கிடக்குதே மெய்யாய்!
( மண்டோதரி வீழ்ந்து மாய்கின்றாள் எங்கும் சோக இசை!)
Narrator: அழிவது உறுதி என்று அறிந்தும்
ஈழத்தமிழன் இறுதி மூச்சு மட்டும்
உறுதியை விட்டான் இல்லை!
வீரத்திற்காகவே வீழ்ச்சியுற்றான்!
வீரத்தின் சின்னமாவான் இந்த
ஈழத்தமிழன் இராவணன்!
ஈழத்தமிழனுக்கு வீர வணக்கம்!
( சோக இசை ஆ ஆஆ ஆஆ என்று பின்ணனியில் இசைக்க ஒளி மங்குகின்றது)
+++++++++++++++++++ நன்றி ++++++++++++++++++++++++++++++++++++++++
இராவணேசன்: அனுப்பினேன் வீரர் எல்லாம்,
அனைவரும் இறந்தனர் ஐயோ!
எனக்கு இப்பரீட்சைதனை
ஏன் வைத்தாய் ஏன் வைத்தாய் இறைவா!
இனி இங்கு பொறுப்பதில்லை- என்
மகன் இந்திரஜித்தை அழைத்துவா
பிரம்மாஸ்திரத்தோடு அனுப்பி
நான் பகைவெல்ல
இந்திரஜித் வரவு: அண்ட பகிரண்ட முதல்
எண்டிசையும் உள்ளவர்கள்
அஞ்செலன்றபயமிடவே!
அண்ட பகிரண்ட முதல்
எண்டிசையும் உள்ளவர்கள்
அஞ்செலன்றபயமிடவே!
ஆணையோடு தேர்க்குதிரை
காலாட்கள் சூழவே!
அந்தணர்கள் ஆசி கூற,,,,,,,
ஆணையோடு தேர்க்குதிரை
காலாட்கள் சூழவே!
அந்தணர்கள் ஆசி கூற,,,,
மண்டலம் புகழ்கின்ற மண்டலம் புகழ்கின்ற
இந்திரஜித்தனும் இந்திரஜித்தனும்
தந்தையை காண்பதற்கு
மாயரதம் ஏறியே மாயரதம் ஏறியே
பேய்கள் நின்றாடவே பேய்கள் நின்றாடவே
வந்தனன் இச் சபைதனிலே!
தாளக்கட்டு : தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,,,
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,
தகதத் தகதத் தகதத்
தகதத் தகதத் தகதத்
தாம் தாம் தக
தகதத் தகதத் தகதத்
தாம் தாம் தக
தகதத் தகதத் தகதத்
தீம் தா தக
தெய்யத் தில்லான
தீம் தா தக
தெய்யத் தில்லான
தோ திந்த தா தக
தீம் தா தக
தீம் தந்தத் தோதிந்தத்
தோதிந்தத் தோதிந்தத்
தகஜொனதா திகஜொனதெய்
தகஜொனதா திகஜொனதெய்
இந்திரஜித் தரு: இந்திரர் முதலாயுள்ள இமையவர்
முனிவர் யாவரும்வந்தடி வணங்கி
வாழ்த்தும் மன்னனே சரணமையா!
எந்தையே எனைப்பெற்ற சுவாமியே
எனையிங்கு வந்திட அழைத்த செய்தி,
வளமுடன் உரைத்திடுவீர்!
இராவணேசன்: சிங்கனுடன் மகரக்கண்ணன்,
தீரனாம் குருதிக்கண்ணன்
நுந்தையாம் கும்பகர்ணன்
அனைவரும் களத்தி மாண்டர்
இங்கிது பொறுக்கவில்லை,
என்செய்வேன் என் மைந்தா!
சென்றுவா பிரம்மாஸ்திரத்தை
செலுத்திவா பகைவர் முன்னால்
இந்திரஜித் கந்தார்த்தம் விருத்தம்:
என் சிறிய தந்தையை கொன்றும்,
பின் உயிரோடு இருக்கின்ற
மனிதர் எவரோ? உன் வீரம் அறியரோ!
உன் மகனை அறியாரோ!
உலுக்கு புதுமை இவரே,
முன்னமே எனைவிட்டால்
அன்னவரை வென்றுங்கள்
முடிபணிய வைத்திருப்பேன்.
இன்னுமேன் தாமதம்
நான் களம் சென்றுடுவேன்!
தாளக்கட்டு : தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,,,
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,
இராவணன் மதிற் புரத்து ஓரத்தில்
மாற்றான் வந்து
வலிமை பல பேசுகின்றான்
என்றறிந்து குதித்தெழுந்த
எனைப்பார்த்து கும்பிடென்றான்
குறைவுற்றாள் உன் தாயார்
கோழி கோழை!
எதிர்த்திடுவேன் எனவுரைக்கும்,
எனது மைந்தா!
ஈன்ற பொழுதைவிட இன்றுதானே!
குதிக்குதடா எனது நெஞ்சம்!
சென்று வாராய்!
தாளக்கட்டு : தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,,,
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தெய்,
(போர்க்கள காட்சி )
கதை சொல்பவன் : இதோ! இதோ! இதோ!
இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
தாதிங்கின ததுமிதிங்கன, தாதிங்கின ததுமிதிங்கன
தங்கின தங்கின தங்கின தங்கின
பிண்ணனி இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
தாதிங்கின ததுமிதிங்கன, தாதிங்கின ததுமிதிங்கன
தங்கின தங்கின தங்கின தங்கின
தாதிங்கின ததுமிதிங்கன, தாதிங்கின ததுமிதிங்கன
தங்கின தங்கின தங்கின தங்கின
இலக்குவணன் களத்தில் வருகின்றான்!
இராவணன் மகன் இந்திரஜித்தை தேடிவருகின்றான்
இந்திரஜித்தா! இந்திரஜித்தா! இந்திரஜித்தா!
இலக்குவணன் : இந்திரஜித்தா எங்கே எங்கே?
எந்தன் கண்கள் அங்கே! அங்கே
இந்திரஜித்தா எங்கே எங்கே?
எந்தன் கண்கள் அங்கே! அங்கே
இலக்குவன் : வீரனாம் இலங்கை வேந்தன் மைந்தனே இந்திரஜித்தா
மாயமாய் போர்கள் செய்து ஆற்றாது ஓடிப்போனாய்
போரிலே முதுகு காட்டல் வீரருக் அழகாகுமாமோ?
போரிட வாந்தாயில்லை, உயிர் விட வந்தாய் இங்கே!
இந்திரஜித் : வீரனோ நீயும் சீச்சீ! விபிடன் உதவியோடு
நேரிலே எனை வெல்லாது சூழ்ச்சியால்
எனை வென்றாய் பாவி!
நாணுண்டு வில்லுண்டு நானஞ்சுவேனோ கண்டு
போரிலே என்ன பேச்சு? புறப்படு அமர்க்களம் செய்வோம்!
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தரிகிடதா தரிகிடதா தரிகிடதா தரிகிடதா
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தாங்கிட தக தக ஜொனு தாங்கிட தக தக ஜொனு
தரிகிடதா தரிகிடதா தரிகிடதா தரிகிடதா
( போர் தொடங்குகின்றது இலக்குவன் அம்பு பட்டு அம்மா என்று அலறி மாய்கின்றான் இந்திரஜித்!)
Narrator: தையின் மேல் சுமந்த கையாள்
தணலின் மேல் மிதக்கின்றாள் போல்
நிலையின் மேல் மிதக்குந்தாளன்
நேசந்தான் நிறைந்த நெஞ்சன்
கொலையின் மேல் குறித்த வேடன்
கூர்ங்கணை உயிரை கொல்ல
மலையின் மேல் மயில் வீழ்ந்தன்ன
மன்னன் முன் மறுகி வீழ்ந்தாள்!
( இராவணன் முன் மண்டோதரி மண்டியிடுகின்றாள்)
மண்டோதரி தரு: மாண்டு மடிந்தானே - மகனே
மறந்துமண் மீதினில் வாழ்வேனோ நான்
அம்மா என்றழைப்பானே! ஐயோ
யாரை அழைத்தானோ நானறியேன்!
புத்திகள் பல சொன்னானே - ஏசிப்
போருக்கனுப்பினாயே ஐயா நீ
சத்துருவால் மாண்டனே - இனி
சாவதொன்றே நானறிந்த வழி!
இராவணன்: முடி பணி அறிந்திடாது மூவுலகாண்ட என்னை
அடிபனிந்தாளவைக்க அவாவுறான் விதி போலும்!
கதியற்றேன், தம்பி மாண்டான், தனத்தை வென்று
வீரப்பதி பெற்றான். என் மைந்தன் படை வீரர்
எல்லாம் மாண்டார்! வென்றில்லன் என்ற போதும்
வேதமுள்ளளவும் நானும் நின்றுள்லளேன் அன்றோ!
இன்றே போகின்றேன் போர்க்களம் நாடி பெண்ணே!
(இராவணன் போர்க்களம் புகின்றான்)
Narrator: சித்திர முடியது நெற்றியில் ஒளிசெய்ய
தேவர்கள் கண்டோட
வெற்றிக்கவசம் மார்பிலிலங்கிட
வீரர்கள் கோஷமிட
மத்தளமதிர வெற்றிச்சங்கின்
வாழ்த்தொலி வானதிர
பத்து தலைநகர்க்கதிபதி இராவணன்
தேர்தனில் ஏறுகின்றான்
தாளக்கட்டு : தகஜொனு தகதிமி, தாம் தாம் தெய்ய
தகஜொனு தகதிமி தெய்ய
தாம் தாம் தெய்ய
நாதருதானி தோம் தருதானி
தாம் தாம் தெய்ய
நாதருதானி தோம் தருதானி
தகதொம் தகதிமி
நாதருதானி தோம் தருதானி
தாம் தாம் தெய்ய
Naraator: வரி சிலை கையில் வளைத்தெடுத்து
வானவர் களி கொள்ள
ஒரு தனி அனுமன் அங்கதனுடனே
உயர்படை பின் செல்ல
எரிபடு பாணம் தெரிந்தெடுத்து
இராவணன் எதி செல்ல
தேவர்க்கதிபதி அளித்த தேரில்
இராகவன் ஏறுகின்றான்
தாளக்கட்டு: தத்தித்தாம், தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம், தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம், தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய
இராமன்
வீரனே இரவணா! இழந்த ஆயுதங்களை பெற்றுவிட்டாயா?
காயங்கள் எல்லாம் ஆறிவிட்டதா? சமரை ஆரம்பிக்கலாமா?
அல்லது இன்று போய் நாளை வருவாயா?
இராவணன்
வீரனே இராமா! உன் சொற்களால் என்ன சுட்டெரிக்காதே!
உன் சொற்கள் நீ செலுத்தும் அஸ்திரங்களை விட கொடியது!
உன்னால் நான் துன்பமுற்றேன் ஆயினும் மானமும் வீரமும்
ஈழ மகனுக்கே சொத்தானது எனவே நான் போராடுவேன்
போராடுவேன் போராடுவேன் போராடுவேன்
( போர் போர் என்ற ஒலி பின்ணனியில் ஒலிக்க போர் தொடங்குகின்றது
இறுதியில் மாவீரன் இராவணன் மண்ணில் சாய்கின்றான். அதைக்கேட்டு மண்டோதரி வருகின்றாள்)
Narrator: உலகமெல்லாம் வென்று ஆண்ட
தனிச்செம்மல் தமிழன் நெஞ்சில்
பலமிக்க அம்பு பாய்ந்து
பறித்ததே உயிரை அம்மா!
புகழொடும் இளைஞரோடும்
புன்னகையோடு வாழ்ந்த மாவீரன்
தமிழன் மண்ணிலே வீழ்ந்தான்!
நிலமக்ள் அவனை தழுவிக்கொண்டள்!
வீரனைக்களத்தில் ராமன்
வெங்கணையால் சாய்த்தான் என்று
தூதர்கள் சொல்லக்கேட்டு
துடி துடித் தோடிவந்து
நாதனைக்கண்டாள் வீழ்ந்தாள்!
புரண்டாள் பின் இராவனேசன்
சாதனை எல்லாம் சொல்லி
தையலாள் அழுகின்றாளே!
மண்டோதரி: வீரம் வீரம் என்று விரும்பி உரைத்தீர் ஐயா! இன்று
விதியுன்னை படுகளம் வீழ்த்தி சிரிக்குதே மெய்யாய்
மூவுலகாண்ட முடி! நிலம் படுகுதே ஐயா!
ஒரு பாவிபோல் கிடக்கின்றீர் பக்கபலமிருந்தும் மெய்யாய்.
வாளெங்கே? கதையெங்கே? மார்பெங்கே?
எனை அணைத்திட்ட வைரத்தோளெங்கே?
எல்லாம் தொலைந்து கிடக்குதே மெய்யாய்!
( மண்டோதரி வீழ்ந்து மாய்கின்றாள் எங்கும் சோக இசை!)
Narrator: அழிவது உறுதி என்று அறிந்தும்
ஈழத்தமிழன் இறுதி மூச்சு மட்டும்
உறுதியை விட்டான் இல்லை!
வீரத்திற்காகவே வீழ்ச்சியுற்றான்!
வீரத்தின் சின்னமாவான் இந்த
ஈழத்தமிழன் இராவணன்!
ஈழத்தமிழனுக்கு வீர வணக்கம்!
( சோக இசை ஆ ஆஆ ஆஆ என்று பின்ணனியில் இசைக்க ஒளி மங்குகின்றது)
+++++++++++++++++++ நன்றி ++++++++++++++++++++++++++++++++++++++++
Ingen kommentarer:
Legg inn en kommentar