கதாகலேற்சபவம் குருசடித்தீவு:
(பின்னணியில் ஆ,,,,,ஆ,,,,,ஆ,,, என்ற கோரஸ் இசையுடன் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் இருந்து இருவர் மேடைக்கு வருவார்)
வலது உரைஞன் : பதுவை நாதரின் சரிதம் மீக நீண்ட சரிதம், ! இடையில்
வருவதோ அற்புதம் அற்புதம் எங்கும் அற்புதம்
யாழ் குருடடித்தீவில் கோவில் கொண்ட கோடியற்புதரின்
ஆலயத்தைப்பற்றி எடுத்துரைக்கவே
ஆர்வமாய் சபைக்கு வந்தோம், ஆதலால் சபையோரின்
ஆதரவையும், அந்தோனியாரின் ஆசீரையும்
வேண்டி நாங்கள் நிற்கின்றோம்,,,,,,,,,,,,
இடது உரைஞன்: பக்தியின் சின்னம், வேத போதகத்தின் கோபுரம்,
புதுமைகள் படைத்திடும் புனிதர் , , மீன்களுக்கும்,
பறவைகளுக்கும் வேதம் கற்பித்தவர், நோய்களை
நீக்கியவர், பேய்களை விரட்டியவர்!
வலது உரைஞன்: இத்தனை புகழ் பூத்த கோடியற்புதரின் புகழை
கொடியேற்றிப் புகழ்ந்து எமது நிகழ்சியை
தொடங்குவோம் வாரீர் பண்னோடு பாடுவோம்
(பாடல் ) அண்ணலே அண்ணலே உம் திருக்கொடிவானில் பறகுதையா!
இடது உரைஞன்: அண்ணல் அந்தோனியாரின் திருக்கொடி குருசடித்தீவு
கண்ணா மரங்களும், உவாகை மரங்களும், ஆவரசு
மரங்களும், நாகதாளி பற்றைகளும், கொவ்வைச்செடிக
ளும் படர்ந்த பசுமையான தீவு தான், இந்த குருசடித்தீவு.
வலது உரைஞன் : மண்டை தீவுக்கு அருகில் அமைந்துள்ளதால் மார்பளவு
நீருக்குள் மாடுகள் இறங்கி வந்து மெய்ந்து குருசடித்தீவிலே
மெய்ந்துவிட்டு செலவதால், மண்டைதீவு மக்கள் இத்தீவை
மாட்டிறக்கம் என்று மகிழ்வாக அழைத்தனர்.
இடது உரைஞன்: மாடுகள் மட்டுமல்ல, கோட்டான் குருவி கொக்கு நாரை
புள்ளினங்கள் எல்லாம் குருசடித்தீவுக்குள் சுற்றிப்பறக்கும்.
அத்தீவிலே எமது மீனவர்கள் மீன் பிடிப்பதோ அருமையான
காட்சி! அதை பாடலோடு பார்ப்போமா?
தாளம்: தனகுந்தாரே தனகுந்தாரே ஏலோ ஏலோ
ஏலேலம்மா,,,,,,,,,,,,,,,,,,,
பொழுது நல்லா விடிஞ்சிருக்கு, புறப்படுங்கோ
மீன் பிடிக்க,,,,,,,
தனகுந்தாரே தனகுந்தாரே ஏலோ ஏலோ ஏலேலம்மா,,,,,
தண்டுவலித்து, தண்டு வலித்து அலைகடலில்
மீன் பிடிக்க,,,,,
தனகுந்தாரே தனகுந்தாரே ஏலோ ஏலோ ஏலேலம்மா,,,,
மார்பளவுத்தண்ணியிலே, மாடு இறங்கும் தீவினிலே
தனகுந்தாரே தனகுந்தாரே ஏலோ ஏலோ ஏலேலம்மா,,,,
சிறுகடலில் சேறு என்றாலும், பட்டியடைத்து
மீன் பிடிப்போம்,,,,,,,
தனகுந்தாரே தனகுந்தாரே ஏலோ ஏலோ ஏலேலம்மா,,,,,,,,,,,
கொக்கு, நாரை, குருவி, கோட்டான், பறக்கு முன்னே,,,,
தனகுந்தாரே தனகுந்தாரே ஏலோ ஏலோ ஏலேலம்மா,,,,
Ingen kommentarer:
Legg inn en kommentar