søndag 12. oktober 2014

இணையப்பார்வையில் இருந்த.........!

இணையப்பார்வையில் இருந்த.........!
கனடாவில் இருந்து திருஆசீர்தாசன் அவர்களால் எழுதப்பட்ட 

சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் தலைவருக்கு

 ஒரு பகிரங்க கடிதம் என்ற ஆக்கத்தை இணையத்தளத்தில் 

இருந்துஅகற்றும்படி நோர்வே கிளை வேண்டுகோள் விடுத்தி

ருந்தது.இணையத்தில் தனிநபர்களின் பெயர்களை குற்றம் 

சாட்டி எழுதப்படும் ஆக்கங்களை தவிர்த்து ஊரின் ஒற்றுமை

யை வளர்த்தெடுக்க உதவுமாறு கேட்டுக்  கொள்கின்றோம் 

என்று அக்கோரிக் கையில் எழுதப்பட்டிருக்கின்றதுநல்ல 

நோக்கத்தோடு விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை  இணை

யம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்,

                       அதற்கு முன் இணையம் அறிவுறுத்த விரும்புவது 

எதுவென்றால்,தவறுகள் களையப்பட்டு,அது மீண்டும் தோன்

 றாமல்,நிர்வாக நடவடிக்கைகள் கைக்கொள்ளப்பட்டால்,

ஒற்றுமையும்,அபிவிருத்தியும் தடை யில்லாமல் தன்பாட்டில் 

வளரும்தவறுகளை மறைப்பதினாலோ அல்லது அதற்காக

 பக்க சார்பாக நடவடிக்கை கள் எடுப்பதினாலோ பிரச்சினை  

கள் தீரப்போவதில்லை.அது பிளவுகளுக்கே  வழிவகுக்கும்

உதாரணத்திற்கு,சர்வதேச தலைவருக்கு என்று எழுதப்பட்ட 

ஆக்கத்தில் தவறுகள் இருந்தால் அது குறித்து,சர்வதேச 

சங்கம் தன் எதிர்ப்பினை காண்பித்திருக்க வேண்டும்,அல்லது

அதற்கான விளக்கத்தை ஆக்கத்தை எழுதியவருக்கு பதிலாக  

அளித்திருக்கவேண்டும்,இதனை விடுத்து நோர்வே கிளையா  

னது,சர்வதேச சங்கதிற்கு,சார்பாக கோரிக்கை விடும் போது 

அது ஏனைய கிளைகளுக்கு தவறான புரிதலை ஏற்ப டுத்த 

வாய்ப் புகள் உண்டு.நிர்வாகத் தில் இருப்பவர்கள் தத்தமக்

குரிய அதிகாரங்கள்,  பொறுப்புகளை செய்வ தோடு,மற்றவர்

களின் செயல்பாடுகளில் தலையிடாமல்,மாறாக ஊக்கப்படுத்

தினால் பிரச்சினைகள் தோன்ற  வாய்ப்புகள் இல்லை.நிர்வாக 

நடவ டிக்கைகள்,சரியான‌ முறையில் மேற்  கொள்ளப்பட்டால்

பல சிக்கல்களுக்கு தீர்வுகாணலாம்.நோர்வே கிளையின் 

உள் நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஆனால் தவாறான புரி

தலுக்கு என்ன செய்வதுஇன்னுமொரு விடையத்தை  இணை

யத்தளம் சுட்டிகாட்ட விரும்புகி ன்றது,தொடர்புசாதானத்தில் 

அபாரா வளர்ச்சி கண்ட,இந்த நூற்றாண்டிலே இணையத்தள

த்தை விட,வளையபூங்கா (Blogs)முக நூல்(facebook)

குறுஞ்செய்தி(Sms )நொடிப் படம் (Insthograme) இப்படி

செய்திகளை அறிவிக்க‌ பல வழிகள உண்டு.  அதனை யாரும்

 தடுக்கமுடியாது எனவே தவறுகள் எழுகின்ற போது,  

அல்லது கேள்விகள் எழும்பும் போது அதனை சரியான 

வழியில் எதிர் கொண்டு கையாளவதே பொது வாழ்வில்

பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் 

செய்ய வேண்டிய முக்கிய பணியாகும்.  

                                          நன்றி

Ingen kommentarer:

Legg inn en kommentar