எரியும் இரவுகள்
-Aj Danial-
-------------------
விரிந்து பரந்த வான்வெளி
மேகக்கூட்டங்களின் பவனி
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
இன்னுமென் கண்களுக்குள் அகப்படா
மெய்ப்பொருளாய் அந்த வட்ட நிலா
சில் வண்டுகள் காதுகளை
வட்டமிட்டு ரீங்காரமிடுகின்றது
வானவெளியில் நாரைக்கூட்டங்களின்
ஊர்வலமிடையே நாடு தாண்டும்
சைபீரியக்கொக்குகள் வகை வகையாய்
விரிந்த வான வெளியில்
எங்கிருந்தோ கருமுகிற்கூட்டம்
ஒளியை விழுங்கிற்று...!!
நீண்டு பரந்த சாலையெல்லாம்
அடங்கி அமைதியாய்
நான் மட்டும் அமைதியின்றி மனம்
வெம்பி வேதனையின் உச்சியில்
பருவ மோகம் தீக்குழம்பாய்
உடல் முழுதும் பரவ
காதல் கண்களின் விழிம்பில்
எட்டிப்பார்த்து எளனம் செய்கின்றது
வெட்கத்தில் தலை குனிந்து
மொட்டை மாடிப் பலகணியில்
ஒற்றையாய் நான் மட்டும்...!
தூரத்து தெரு விழக்குகள்
மின்மினிபூச்சிகளாய்
கொஞ்சம் குளிர்காற்று
உடலை தொட்டுச்செல்ல
உடலின் செல்கள் எல்லாம்
என்னோடு மல்லுக்கட்டுகின்றது
கைகளால் உடலைத்தடவிப்பார்கின்றேன்
இடக்கையில் அகப்பட்டது
அவள் கொடுத்த கடிகாரம்
நேரத்தை நோட்டமிடுகின்றேன்
நேரம் 12.30 அதிகாலை
கண்கள் எரிகின்றன
தூக்கம் கண்களோடு
முட்டிமோதி ஈழப்போர்
செய்கின்றது
நானோ அப்பாவித்தமிழனாய்
ஐ நா வை எதிர்பார்த்து
கதிகலங்கி நிற்கின்றேன்
எப்போ வருமப்பெண் நிலா?
ஓர் மெல்லிய தென்றல்க்காற்று
தேகத்தை உரசிச்செல்ல
என் தேகமெல்லாம் சிலிர்த்தது
என் இதயத்தில் தேங்கி இருக்கும்
நினைவுகளை மீட்டுப்பார்த்தது.
உன் கருங்குழல் நறுமணம்
காற்றோடு கலந்து
வழியெல்லாம் நறுமணமாக்கி
உன்வருகையை என்னிடம்
உறுதிசெய்தது
கட்டியணைத்து தலை கோதி
உதட்டில் ஈர முத்தம்
உன் காது மடலோரம்
மெல்லிய உரசல்
கூச்சத்தில் நீ
என் மூச்சுக்காற்று
உன் மூச்சோடு கலந்தது
உன் காந்தக்கண்கள்
மௌனமொழி பேசிற்று
ஈருடலும் ஓருடலாய் அன்று
சூடான முத்தத்தைப்
பரிமாறினோம்
இரு கைகளும் இணைந்தது
என் மார்பில் முகம்
புதைத்தாய்
மோகத்தீ உச்சத்தில்
உன் கழுத்தின் நடுவே
மார்பின் வடக்கே
அழகான சிறுமச்சம்
உன் வளைந்த கைகள் என்
உதட்டின் வல்லமையால்
மன்மத வீணையானது நீ
நெளிந்து குழைந்து
தலையை என் படர்ந்த
மார்புக்குள்ப்புதைத்தாய்
காதல் தீ பற்றி எரிய
நட்ட நடுநிசியில்இருவரும்
இன்ப யாகம் நடத்தினோம்
இவ்வுலகம் நம் கைகளில்
இந்த இரவினை ஆளும்
ராணியாய் நீ பதவியேற்றாய்
நான் மோகத்தீயை வளர்த்தேன்
அந்த இரவும் வெட்கப்பட்டது அன்று
உன் உதட்டின் சாயம் அமிர்தமாய் அகிற்று
என் மார்பில் நீ கோலமிடும் கிராமத்துப்
பெண்ணாய் அன்று
என் முழு இரவினை
அலங்கரித்தாய்.
தொட்ட இடமெல்லாம் சூடு
இருவரது முத்தத்தைப்
பரிமாறினோம்
தேங்கிய சூடான முத்தம்
மடை உடைத்துப்பாயும் ஆறாய்
பொங்கிப்பாய்ந்தது
மடையடைக்கும் பணியில் நீ
பெண்ணுக்குரிய சிறந்த பண்பு
அன்று உன்னில் கண்டேன்
அந்த இரவும் நம்மிடம் தோற்றது
இறுதியில் நீயே எனை வென்றாய்...
தோற்றது நான் தான் அன்பே
அதிலும் கர்வம் கொள்கின்றேன்
நம் காதல் வென்றது
ஜென்மங்களில் நம்பிக்கையில்லை
வாழ வேண்டும் நம் காதல்
மூச்சு இருக்கும் வரை
வா நிலா வா !!
வாழ்ந்துதான் பார்க்கலாம்.....
-Aj Danial-
Ingen kommentarer:
Legg inn en kommentar