fredag 16. januar 2015

ஒற்றுமை உணர்வு நாவாந்துறை மக்களுக்கு மிக மிக அவசியமானது

                   

                                                        ண்மைக்காலமாக நாவாந்துறை மக்களிடையே சண்டை சச்சரவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு பகுதி மக்கள்,   இன் னொரு பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இவர்கள், அவர் கள் மீது பதில் தாக்குதல் செய்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. சச்சரவு களுக்கு  ஆயிரம் காரணம் இருக்கலாம் அதை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் உண்டாக்குவதில் இரு பகுதியிலும் உள்ள, புத்தி ஜீவிகள், சமய ஆர்வலர்கள் எவ்வளவு தூரம் அக்கறை காட்டியுள் ளார்கள் என்பது எமக்கு முன் உள்ள கேள்வி? இரு கோவில்களுக்கு ஒரு பங்கு தந்தை. அதன் அர்த்தம் நாவாந்துறையில் இரண்டு ஆலையங்கள் இருந்தா லும்,  ஒரு பங்கு என்பதுதான் அர்த்தம். ஆனால் ஒரு பங்குச்சபை உள்ளாதா? என்றால் அதுதான் இல்லை. இரு ஆலையங்களுக்கும் தனித்தனியே வெவ் வேறு பங்கு சபைகள்.
                                                               பிரிவினை, வேற்றுமை என்பது ஆண்டவன் ஆலையம் என்பதில் ஆரம்பமாகின்றது என்பதை நினைக்கையில் வேதனை யாக இருக்கின்றது. இப்படிப்பட்ட ஆலையங்கள் தேவைதானா என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. அன்பு ,அயலவர் ,பகிர்வு என்ற உண்ணதமான கிறிஸ்தவ பண்புகள் அறவே அற்ற ஒரு ஊரை கடவுள் எப்படி ஆசீர்வதிப்பார்? அந்த ஊரில் இருந்து பெரும் கல்விமான் கள்,  தொழில் அதிபர்கள், சமூக தலை வர்கள் உருவாக கடவுளால் எப்படி உதவி செய்ய‌ முடியும்?  தற்பொழுது இரு பகுதி மக்களும் ஒன்றாக, ஒற்றுமையாக இருப்போம் என்று உறுதி மொழி கொடுத்தால் தவிர,  நாவாந்துறைக்கு, பங்கு குரு வரமாட்டார் என்பதும், திருப் பலி எதுவுமே நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது வர வேற்க்கத்தக்க விடயம். ஆனால் ஒற்றுமையை உருவாக்கும் ஆரம்ப பணியை யார் செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? என்பது தான் கேள்வி.
                                                                                               முதலில் அதை ஆண்டவன் சந்நிதியாக உள்ள ஆலையத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். உடனடியாக நாவாந்துறயில் பொதுப்பங்கு சபை ஆரம்பிக்கப்படவேண்டும். எல்லாவித மான சமூக பிரச்சனைகளையும்,  பங்கு குருவின் வழிகாட்டலில், இச்சபை யில் ஆராய்ந்து, நியாயமான தீர்வுக்கு வரவேண்டும். இரு பகுதி இளைஞர் களும், இரு பாலாரும், பங்கு கொள்ளும் ஒரு இளைஞர் மன்றம் உருவாக்க ப்படல் வேன்டும். குறிப்பாக இளைஞர் மத்தியில் இருந்துதான் பிணக்குகள் ஆரம்பிப்பதால், இளைஞர்களிடையே விழிப்புணர்வு, முன்னேற்ற இலட்சி யங்கள் என்பன விதைக்கப்படல் வேண்டும். இதற்கு இந்த இளைஞர் ஒன்றி யம், கருத்தரங்கு கள், ஞான ஒடுக்கம் போன்ற வழிமுறையில் பதப்படுத் தலாம்.
                                                                     விளையாட்டு துறை தான், பிரச்சனைகள் ஆரம்பிப்பதற்கு தோறுவாயாக இருப்பதால், முதலில் விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஊர் என்ற (We feelin target) உணர்வு உருவாக்கப்படல் வேண்டும். இரு பகுதி விளை யாட்டு அணிகளும் மற்ற அணிகளை மனமார ஆதரிக்கவேண் டும் இருவரில் யார் வென்றாலும்  ஊர் பொதுவாக வெற்றியை கொண்டாட வேண்டும். இரு அணிகளூம் தமக்குள் மோதிக்கொள்ளும் சந்தர்ப்பம் வந்தால், அதை தவிர்க்கவேண்டும். முடிந்தால் ஒரு படி முன் சென்று, நாவாந்துறை தேர்வு அணியை Navanthurai Selected உருவாக்கலாம். இது ஒரு சவாலான விட யம்தான் இதை உருவாக்கிவிட்டாலே சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விடும். இதை உருவாக்கி விட்டு, சர்வ இலங்கைக்கே நாவாந்துறை சமூகம் சவால் விடலாம் நிட்சயம் வெல்வார்கள் என்பது உறுதி. அன்பர்களே இதனை வாசிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.                    
                                                                                       நன்றி
                                                                                                                       இணைய ஆசிரியர்

Ingen kommentarer:

Legg inn en kommentar