தேவமைந்தன் உயிர்த்தெழுந்தார்
காரிருள் சூழ்ந்திருக்க
காவலர் காத்திருக்க
பாரிலின்று உயிர்த்தெழுந்தார்-எங்கள்
பரமனவன் யேசுபிரான்
கல்வாரிப் பயணமதை
கலங்காது நீயு மேற்று
சாவை வென்ற சத்தியனாய்
தரணி யெங்கும் திகழுகின்றாய்
கொடியவரின் தீர்ப் பெல்லாம்
தகர்ந் திங்கே போனதுவே
மறை நூல் வாக்குகளும்
மாறாது நிலைத்ததுவே
உயிர்த் தெழுந்த இறையவனே-எம்
உளம் கனிந்த இறை மகனே
உமை யன்றி யாரையா-எமை
இன்று காப்பதுவே
இரு ளகற்றி ஒளி தந்தாய்-எம்
மனங்களிலே மகிழ்வு தந்தாய்
கண் கலங்கி நாம் நின்றோம்-இனி
ஆர்ப்பரித்து அக மகிழ்வோம்
நாவாயூரான்
வென்சலாஸ் அனுரா
கனடா
647 854 2927
Ingen kommentarer:
Legg inn en kommentar