வெற்றியின் நாயகனே
மனித மனங்களை வெல்ல முடிந்ததா?
ஏன் இந்த மனிதன் இன்னமும்...
மதம் பிடித்து நிற்கின்றான்?
மனிதன் மதத்தையும்...
கடவுளையும் புரிந்துகொள்ளவில்லையா?
ஏத்தனை தடவைகள் ஏசு...
மரணித்து... உயிர்த்தாலும்...
மனித மனம்
வெல்லப்படுமா?
மீண்டும்... மீண்டும்... வருவார்...
மீண்டும்... மீண்டும்... மரிப்பார்...
மீண்டும்... மீண்டும்... உயிர்ப்பார்...
சாவையே வென்ற உன்னால்....
மனித மனங்களை
வெல்ல முடிந்ததா?
கவிபாரதி
ஸ்காபரோ கனடா
Ingen kommentarer:
Legg inn en kommentar